Showing posts with label பெரும்பான்மை சமூகத்தின் தலைவர்கள்... Show all posts
Showing posts with label பெரும்பான்மை சமூகத்தின் தலைவர்கள்... Show all posts

Saturday, 14 September 2013

The first TAMILAN(indian) who is receipt of LUTHER TERRY award is Mr.Dr.ANBUMANI RAMADASS."

The first TAMILAN(indian) who is receipt of LUTHER TERRY award is Mr.Dr.ANBUMANI RAMADASS."அன்புமணி அவர்களுக்கு உலகின் மிகப்பெரும் விருதான "Luther L. Terry" விருதை அளித்த போது, அவர் பேசிய வீடியோ தொகுப்புபுகையிலை பொருட்கள் தடுப்பிற்காக , அமெரிக்கா வாஷிங்கடனில் ஜூலை14 , 2006 ஆம் ஆண்டு , அமெரிக்கபுகையிலை தடுப்பு மையம் , நமது சின்ன அய்யா அன்புமணி அவர்களுக்கு உலகின் மிகப்பெரும் விருதான "Luther L. Terry" விருதை அளித்தே :அதோடு அவர் செய்த சாதனைகளும் , ஒரே நாளில் அவரின் பசுமை தாயகம் மூலம் 2 லட்சம் மரக்கன்றுகள் நட்டு அதை உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது இவர்தான் 2016ன் முதல்வர் பதவிக்கு தகுதியானவர்"



Sunday, 7 July 2013

யார் இந்த நாகப்பன் படையாட்சி?!

யார் இந்த நாகப்பன் படையாட்சி?! 

சமீபத்தில் நடந்த மாணவர்களின் உண்ணாவிரத போராட்டத்தின் வீரியம் சட்ட மன்றம், பாராளுமன்றம், தாண்டி ஐநாசபை வரை சென்றது. அந்த அளவிற்கு சத்தியாக்கிரகம் என்ற அமைதி வழி போராட்டம் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சிறந்த போராட்டமாக கருதப்படுகிறது, அது தென்ஆப்பிரிக்காவில் இருந்து தான் முதன்முதலில் அது வீரியமாக உதயமானது.
 
உலகின் போற்றத்தக்க போராட்டமான சத்தியாகிரகத்தின் 
முதன் முதல் தியாகி தான் இந்த நாகப்பன் படையாட்சி!!

ஆனாலும் இவரைப்பற்றி வெளியில் அதிகம் தெரியவில்லை.
காரணம் இவர் பெரும்பான்மை சமூக தமிழரல்லவா.!!

இனி உலகம் போற்றும் அந்த சத்தியாகிரகத்தின் 
முதல் போராளி மற்றும் முதல் தியாகியின் 
வாழ்க்கை வரலாறை முழுமையாக பார்ப்போம்.,

மகாத்மா காந்திக்காக வன்னியர்கள் தியாகம்

ஜொகனஸ்பர்க் அருங்காட்சியகத்தில் உள்ள சாமி நாகப்பன் படையாட்சி படம்

மகாத்மா காந்தியின் தென் ஆப்பிரிக்க விடுதலைப் போரில் தமிழர்கள் பெருமளவில் பங்கேற்ற போதும், அதிலும் பெரும்பகுதியினராக இருந்தவர்கள் வன்னியர்கள். இன்றைக்கும் தென் ஆப்பிரிக்க தமிழ்சமூகத்தில் முதன்மையாக இருப்பவர்கள் வன்னியர்கள்தான். படையாட்சி எனும் பெயர் இப்போதும் அங்கு பிரபலமான பெயராக உள்ளது. (அண்மையில் தென் ஆப்பிரிக்க அரசாங்கத்தை சோகத்தில் ஆழ்த்திய ஒரு முக்கிய நிகழ்வு அந்நாட்டு கேபினட் அமைச்சர் இராதாகிருஷ்ண படையாட்சியின் மரணம்).

உலகின் முதல் சத்தியாகிரக தியாகி.

மகாத்மா காந்தி வடிவமைத்த மாபெரும் போராட்ட முறை சத்தியாகிரகம் எனப்படுவதாகும். இந்திய விடுதலைப்போராட்டம், நெல்சம் மண்டேலாவின் தென் ஆப்பிரிக்க விடுதலைப் போராட்டம், மார்ட்டின் லூதர் கிங்கின் அமெரிக்க கருப்பின உரிமைப் போராட்டம் என உலகின் மிகப்பெரிய போராட்டங்களின் அடிப்படை வடிவம் சத்தியாகிரகம்தான். அப்படிப்பட்ட தென் ஆப்பிரிக்க சத்தியாகிரகப் போருக்காக உயிர்த்தியாகம் செய்த உலகின் முதல் தியாகி "சாமி நாகப்பன் படையாட்சி. உலகின் முதல் சத்தியாகிரக உயிர்த் தியாகம் எனும் அந்த மாபெரும் நிகழ்வு வரலாற்றின் பக்கங்களில் மறைக்கப்பட்டுவிட்டது.
 சாமி நாகப்பன் படையாட்சி
ஜொகனஸ்பர்க் சத்தியாகிரக காலகட்டத்தில் காந்தியும் அவருடன் சேர்ந்து போராடியோரும் பலமுறை சிறை சென்றனர். "இந்தியர்கள் சட்டத்தை மீறவேண்டும், அதற்கு கிடைக்கும் தண்டனையை மனமுவந்து ஏற்கவேண்டும்" என்ற காந்தியின் கட்டளைக்கு ஏற்ப "பெயரை பதிவு செய்ய மறுத்து சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்ற காரணத்தால்" 1909 ஆம் ஆண்டு சூன் மாதம் 21 ஆம் நாள் கைது செய்யப்பட்டார் தமிழரான சாமி நாகப்பன் படையாட்சி. அவருக்கு 10 நாள் கடின உழைப்புடன் கூடிய கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

முதல் நாள் இரவு ஜொகனஸ்பர்க ஃபோர்ட் சிறையில் அடைக்கப்பட்டார் சாமி நாகப்பன் படையாட்சி. (இதே சிறையில்தான் காந்தியும், பின்னாளில் நெல்சன் மண்டேலாவும் அடைக்கப்பட்டனர். 'கான்சிடியூசன் மலை' என்று அழைக்கப்படும் அந்த இடம் இப்போது ஜொகனெஸ்பர்க் நீதிமன்றமாகவும், அருங்காட்சியகமாகவும் இருக்கிறது). அடுத்த நாள் 26 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுக்ஸ்கெய் சாலை சிறை முகாம் எனும் இடதிற்கு நடத்தியே அழைத்துச் செல்லபட்டார். அங்கு அவர் சிறை அதிகாரிகளால் தாக்கப்பட்டார். கடும்குளிரில் திறந்தவேளி கூடாரத்தில் தங்கவைக்கப்பட்டார். சரியான உணவும் இல்லை. உடல் நலம் பாதிப்படைந்த நிலையிலும் சாலை அமைத்தல், அதற்காக கல் உடைத்தல் போன்ற கடுமையான வேலைகள் தொடர்ச்சியாக கொடுக்கப்பட்டன. உடல்நலப் பாதிப்பிற்கு சிகிச்சை எதுவும் அளிக்கப்படவில்லை.
ஜொகனஸ்பர்க ஃபோர்ட் சிறை
ஏறக்குறைய கொலை செய்யப்பட்டவராக சூன் 30 ஆம் நாள் விடுதலை செய்யப்பட்ட சாமி நாகப்பன் படையாட்சி 1909 ஆம் ஆண்டு சூலை 6 ஆம் நாள் இரட்டை நிமோனியாவால் இதயம் செயலிழது மரணத்தை தழுவினார். 1909 ஆம் ஆண்டு சூலை 7 ஆம் நாள் ஜொகனஸ்பர்க் இந்தியர்கள் அவர் உடலை ஒரு பொது நிகழ்ச்சியாக பிராம்ஃபோன்டெய்ன் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்தனர்.

1909 ஆம் ஆண்டு சூலை 19 அன்று மாஜிஸ்ட்ரேட் மேஜர் டிக்சன் என்பவரது தலைமையில் "சாமி நாகப்பன் படையாட்சி சிறைவாசத்தால் கொல்லப்பட்டது" குறித்து விசாரிக்க விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. ஆகஸ்ட் மாதத்தில் அளிக்கப்பட்ட விசாரணை அறிக்கை சிறை அதிகாரிகள் குற்றமற்றவர்கள் என்றது. இதற்கு இந்திய வம்சாவழியினர் திரண்ட ஜொகனஸ்பர்க் பொதுக்கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அரசாங்கத்திற்கு காந்தி எழுதிய கடிதத்தில் விசாரணை அறிக்கையில் உள்ள விசயங்களே நாகப்பன் சிறைவாசத்தால் கொல்லப்பட்டதை உறுதி செய்வதாக தெரிவித்தார்.

சாமி நாகப்பன் படையாட்சி சத்யாகிரகியாக சிறை சென்று உயிர்தியாகம் செய்யும் போது அவரது வயது பதினெட்டு. அந்த இளம் வயதில் சம உரிமைக்காக தனது உயிரை தந்தார் அவர்.
 பிராம்ஃபோன்டெய்ன் கல்லறைத் தோட்டம்

1914 ஆம் ஆண்டு சூலை 18 ஆம் நாள், தனது 21 ஆண்டுகால தென் ஆப்பிரிக்க வாழ்வை முடித்துக்கொண்டு, காந்தி லண்டன் வழியாக இந்தியாவுக்கு கிளம்பினார். அதற்கு மூன்று நாள் முன்னதாக, சாமி நாகப்பன் படையாட்சி இறந்து ஐந்தாண்டுகளுக்கு பின்னர், சூலை 15 அன்று தென் ஆப்பிரிக்காவின் ஜொகனஸ்பர் நகரில் உள்ள பிராம்ஃபோன்டெய்ன் கல்லறைத் தோட்டத்தில் சாமி நாகப்பன் படையாட்சியின் நினைவிடத்தை திறந்துவைத்தார் மகாத்மா காந்தி.

(தென்னாப்பிரிக்க இனவெறி ஆட்சி காலத்தில் சாமி நாகப்பன் படையாட்சி நினைவிடம் சிதைக்கப்பட்டது, தென் ஆப்பிரிக்காவில் 1994 இல் நிறவெறி ஆட்சி முடிவுக்கு வந்த பின்னர் 20.4.1997 அன்று மீண்டும் சாமி நாகப்பன் படையாட்சியின் நினைவிடம் மறுசீரமைக்கப்பட்டது. 
அதனை விடுதலைப் போராட்ட வீரரும் நெல்சன் மண்டேலாவின் நண்பருமான வால்டர் சிசுலு மற்றும் இந்திய தூதரும் காந்தியின் பேரனுமான கோபாலகிருட்டின காந்தியும் திறந்து வைத்தனர்.)

தனது சத்தியாகிரகப் போராட்டத்தில் உயிர்நீத்த முதல் தியாகி சாமி நாகப்பன் படையாட்சியின் வீரமரணம் காந்தியின் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது என்பதை அவரது பேச்சுகளில் இருந்தும் எழுத்துகளில் இருந்தும் அறியமுடியும்.

தனது மகன் சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்று முதன்முதலாக சிறை சென்ற போது -  நாகப்பன் தியாகத்தோடு ஒப்பிட்டால், தனது மகனின் சிறைவாசம் பெரிதல்ல என்று 14.12.1909 அன்று இந்தியன் ஒப்பீனியனில் எழுதினார் காந்தி.

தனது சகோதரர் இறந்த போது -   நாகப்பன் உயிரிழப்பு தனக்கு ஏற்படுத்திய மன வலியுடன் ஒப்பிட்டால் தனது சகோதரன் இறப்பால் ஏற்படும் வலி பெரிதல்ல என்று 18.3.1914 அன்று இந்தியன் ஒப்பீனியனில் எழுதினார் காந்தி.

சாமி நாகப்பன் படையாட்சியின் தியாகத்தை போற்ற வேண்டும் என காந்தி விரும்பினார். முதலாவதாக, 6.10.1909 அன்று போலக் என்பவருக்கு எழுதிய கடிதத்தில் சாமி நாகப்பன் நிழற்படம் கிடைத்ததைக் குறிப்பிட்டு, உடனடியாக அதனை சென்னையிலிருந்து வெளிவரும் பத்திரிகைகளில் வெளியிட வேண்டும் என்று காந்தி தெரிவித்தார். இதன் மூலம் தமிழ்மக்களிடம் நாகப்பன் தியாகத்தை கொண்டுசெல்ல வேண்டும் என அவர் நினைத்தார். அந்த விருப்பம் நிறைவேறவில்லை.

அடுத்ததாக, நாகப்பன் தியாகத்தை போற்றும் வகையில் ஜொகனஸ்பர்க் நகரில் ஒரு கல்வி உதவித்தொகை நினைவு நிதியை உருவாக்க விரும்பினார். அதற்காக திருமதி.வோகல் என்பவர் நிதிதிரட்ட முன்வந்த போது காந்தி அதனை வரவேற்று ஆதரித்து 9.12.1911 மற்றும் 14.6.1912 தேதிகளில்  இந்தியன் ஒப்பீனியன் பத்திரிகையில் எழுதினார். அதுமட்டுமல்லாமல் சென்னை, மும்பை உள்ளிட்ட இடங்களிலும்  நாகப்பன் நினைவு நிதியை உருவாக்க வேண்டும் என்றார் காந்தி. அதுவும் நடக்கவில்லை.

காந்தி இந்தியா திரும்பிய பின்னர் - இந்திய சுதந்திரப் போராட்டம் எப்படி அமையவேண்டும் என்பதற்கு - போராட வருவோர் நாகப்பனை முன்னுதாரணமாக கொண்டு அவர் காட்டிய பதையில் பயணிக்க வேண்டும் என்றார் காந்தி. சென்னை (21.4.1915), மதுரை (26.3.1919), தூத்துக்குடி (28.3.1919), நாகப்பட்டிணம் (29.3.1919) என தமிழ்நாட்டில் தான் பங்கேற்ற கூட்டங்களில் எல்லாம்  நாகப்பன் தியாகத்தை புகழ்ந்து பேசினார் காந்தி.

இந்தியாவின் எரவாடா சிறையில் இருந்த காலத்தில் 'தென் ஆப்பிரிக்க சத்தியாகிரகிப் போராட்டம்' எனும் விரிவான நூலை எழுதினார். இந்த நூல் 1928 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது. அந்த நூலில் நாகப்பன் குறித்து விரிவாகக் கூறியுள்ளார் மகாத்மா காந்தி.

"நாகப்பன் ஒரு இளம் சத்தியாகிரகி. பதினெட்டு வயதில் சிறையில் அடைக்கப்பட்ட அவர் சிறையில் கொடுக்கப்பட்ட வேலைகளைச் செய்தார். அதிகாலையில் சாலை அமைக்கும் பணிக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு இரட்டை நிமோனியாவால் தாக்கப்பட்டு சிறையிலிருந்து வெளியானவுடன் 6.7.1909 அன்று வீர மரணம் அடைந்தார்.

நாகப்பன் கடைசி நிமிடம் வரை உயிரோடிருந்த ஒவ்வொரு நிமிடமும் சத்தியாகிரகப் போராட்டத்தை மட்டுமே பேசியதாக அவரோடு இருந்தவர்கள் கூறினார்கள். அவர் ஒருபோதும் சிறைக்கு சென்றதை நினைத்து வருந்தவில்லை. நாட்டுக்காக உயிர் தியாகம் செய்வதை அவர் பெருமிதமாகக் கருதினார்.

நம்முடைய தராதரத்தில் பார்த்தால் நாகப்பன் எழுத்தறிவற்றவர். அவர் தனக்குத் தெரிந்த அரைகுறை ஆங்கிலமும் சூலு (தென் ஆப்பிரிக்க) மொழியும் பேசினார். அரைகுறை அங்கிலத்தில் எழுதினார். எப்படிப்பார்த்தாலும் அவர் கற்றறிந்தவர் அல்ல. இருந்தாலும் அவரது தேச பக்தி, அவரது வலிமை, அவரது எதையும் தாங்கும் துணிச்சல், மரணத்தையே எதிர்கொள்ளும் ஆற்றல் ஆகியவற்றை கருத்தில் கொண்டால் அவர் எல்லாம் வல்லவராக இருந்தார்.

கற்றறிந்த கல்விமான்களால் தென் ஆப்பிரிக்க சத்தியாகிரகப் போர் வெற்றிபெறவில்லை, மாறாக நாகப்பன் போன்ற வீரர்கள்தான் அதனை வெற்றியடைய வைத்தனர்" என்று எழுதியிருக்கிறார் காந்தி.

இத்தனைக்கு பிறகும் விடுதலை அடைந்த இந்தியாவில், அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில், சாமி நாகப்பன் படையாட்சியின் தியாகம் வெளியே தெரியாமல் மறைந்து போய்விட்டது.

இப்படியாக - மகாத்மா காந்தியை உருவாக்கிய "தமிழர்கள், வன்னியர்கள்" மற(றை)க்கப்பட்டுவிட்டனர். இதைப்பற்றி பேசினால்
அது "சுய இன, சுய சாதிப் பெருமை" என்று அடையாளப்படுத்தப்படலாம்.

தொடர்புடைய சுட்டிகள்

1. மறக்கப்பட்ட மாபெரும் தியாகம்: சாமி நாகப்பன் படையாட்சி!
2. தென் ஆப்பிரிக்க சத்தியாகிரகமும் தமிழர்களின் தியாகமும்
3. தமிழ் வீரத்தை புகழும் மகாத்மா காந்தி: சாமி நாகப்பன் படையாட்சி
4. தியாகத்தின் வேரைத்தேடி: தென் ஆப்பிரிக்காவிலிருந்து மயிலாடுதுறைக்கு ஒரு பயணம்

மனமார்ந்த நன்றி: haaram.com

Edification: அரசகுலன் வன்னித்தமிழன்

Wednesday, 26 June 2013

முடிந்தால் இந்த மறத்தமிழனின் கேள்விக்கு மழுப்பாமல் பதில் சொல்லுங்கள்;

தமிழகத்தை குடும்பம் சகிதமாக
ஆளத்துடிக்கும் திராவிட டிராயர்களே,,,

பெரியார் கொடுத்த கொள்கையையே
மறந்த நீங்கள்,,,நேற்று இறந்த ஈழத்தவனையா
மறவாமல் இருப்பீர்கள்,,,,இப்போதும் உண்மையை
மறைத்து உங்களால் மழுப்ப முடியாது,

முடிந்தால் இந்த மறத்தமிழனின் கேள்விக்கு
மழுப்பாமல் பதில் சொல்லுங்கள்,






































என்றும் உண்மையுடன்
வன்னித்தமிழன்

Friday, 21 June 2013

பா.ம.க., செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்


பா.ம.க., செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்
===================================
இன்று பாமக செயற்குழு கூடி சில தீர்மானங்களை நிறைவேற்றியது. அதில், வரும் மாநிலங்களவைத் தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை என்பது முக்கியமான தீர்மானம்.

பா.ம.க., செயற்குழுத் தீர்மான விவரம்:

தீர்மானம் -1 : நீதி கேட்டு போராடிய பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அய்யாவை கைது செய்த தமிழக அரசுக்கு கண்டனம்

தீர்மானம் - 2: வன்னியர் சங்கத் தலைவர் ஜெ. குருவுக்கு மருத்துவ சிகிச்சை மறுக்கப்படுவதற்கு கண்டனம்

தீர்மானம் - 3: தடுப்புக்காவல் சட்ட கைது நடவடிக்கை: தமிழக அரசின் அடக்குமுறைக்கு கண்டனம்

தீர்மானம் - 4: மரக்காணம் கலவரம் குறித்து நீதிவிசாரணை நடத்தாததற்கு கண்டனம்

தீர்மானம் - 5: மரக்காணம் கலவரத்தில் உயிரிழந்தோருக்கு வீரவணக்கம்

தீர்மானம் -6: காவிரிப் பிரச்சனைக்குத் தீர்வுகாண அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டாத தமிழக அரசுக்கு கண்டனம்

தீர்மானம் -7: வறட்சி நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளாத அரசுக்கு கண்டனம்

தீர்மானம் - 8 : விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி


தீர்மானம் - 9 : விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தாததற்கு கண்டனம்

தீர்மானம் -10 : இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை மீட்க வேண்டும்

தீர்மானம் -11 : இலங்கையில் 13-ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தை ரத்து செய்வதற்கான முயற்சிகளை முறியடிக்க வேண்டும்

தீர்மானம் -12 : தமிழகத்தில் சந்தி சிரிக்கும்  சட்டம் ஒழுங்கு

தீர்மானம் -13 : தமிழகத்தில் முழு மதுவிலக்கு

தீர்மானம் - 14 : கல்விக்கட்டண கொள்ளை

தீர்மானம் - 15 : மாநிலங்களவைத் தேர்தல் - பா.ம.க. புறக்கணிப்பு

தமிழ்நாட்டில் கடந்த 2011&ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, எதிர்காலச் செயல் திட்டங்கள் குறித்து விவாதிப்பதற்காக 27.07.2011 அன்று சென்னையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் இனி வரும் காலங்களில் திராவிடக் கட்சிகளுடனோ அல்லது தேசியக் கட்சிகளுடனோ கூட்டணி அமைப்பதில்லை என்றும், ஒத்த கருத்துள்ள கட்சிகள் மற்றும் சமுதாய அமைப்புகளுடன் இணைந்து தனி அணியை ஏற்படுத்தி போட்டியிடுவது என்றும் முடிவெடுக்கப் பட்டது. பாட்டாளி மக்கள் கட்சியின் இந்த முடிவு அனைத்து தரப்பு மக்களிடமும் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் செல்வாக்கும்  பெருமளவில் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்கு 6 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் 27-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் தங்களுக்கு ஆதரவளிக்கும்படி போட்டியிடுகின்ற சில கட்சிகள் எங்களுக்கு கோரிக்கை விடுத்தன. இதுகுறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகக் குழு கூட்டத்தில்  விவாதிக்கப்பட்டது. அக்கூட்டத்தில் பேசிய அனைவரும் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தனித்துப் போட்டி என்ற முடிவில் உறுதியாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். நிர்வாகக் குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் குறித்து இன்றைய செயற்குழு கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. நிர்வாகக்குழு கூட்டத்தில் காணப்பட்ட அதே உணர்வே இன்றைய செயற்குழு கூட்டத்திலும் வெளிப்பட்டது.

மாநிலங்களவைத் தேர்தலில் யாரையும் ஆதரிக்காமல், புறக்கணிக்க வேண்டும்  என்று செயற்குழு உறுப்பினர்கள் வலியுறுத்தினர். மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களின் கருத்தை ஏற்று வரும் மாநிலங்களவைத் தேர்தலில் எந்தக் கட்சியையும் ஆதரிப்பதில்லை என்றும், மாநிலங்களவைத் தேர்தலை புறக்கணிப்பது என்றும் செயற்குழு கூட்டம் ஒரு மனதாக முடிவெடுக்கிறது.
பா.ம.க., செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்
===================================
இன்று பாமக செயற்குழு கூடி சில தீர்மானங்களை நிறைவேற்றியது. அதில், வரும் மாநிலங்களவைத் தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை என்பது முக்கியமான தீர்மானம்.

பா.ம.க., செயற்குழுத் தீர்மான விவரம்:

தீர்மானம் -1 : நீதி கேட்டு போராடிய பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அய்யாவை கைது செய்த தமிழக அரசுக்கு கண்டனம்

தீர்மானம் - 2: வன்னியர் சங்கத் தலைவர் ஜெ. குருவுக்கு மருத்துவ சிகிச்சை மறுக்கப்படுவதற்கு கண்டனம்

தீர்மானம் - 3: தடுப்புக்காவல் சட்ட கைது நடவடிக்கை: தமிழக அரசின் அடக்குமுறைக்கு கண்டனம்

தீர்மானம் - 4: மரக்காணம் கலவரம் குறித்து நீதிவிசாரணை நடத்தாததற்கு கண்டனம்

தீர்மானம் - 5: மரக்காணம் கலவரத்தில் உயிரிழந்தோருக்கு வீரவணக்கம்

தீர்மானம் -6: காவிரிப் பிரச்சனைக்குத் தீர்வுகாண அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டாத தமிழக அரசுக்கு கண்டனம்

தீர்மானம் -7: வறட்சி நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளாத அரசுக்கு கண்டனம்

தீர்மானம் - 8 : விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி

தீர்மானம் - 9 : விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தாததற்கு கண்டனம்

தீர்மானம் -10 : இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை மீட்க வேண்டும்

தீர்மானம் -11 : இலங்கையில் 13-ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தை ரத்து செய்வதற்கான முயற்சிகளை முறியடிக்க வேண்டும்

தீர்மானம் -12 : தமிழகத்தில் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு

தீர்மானம் -13 : தமிழகத்தில் முழு மதுவிலக்கு

தீர்மானம் - 14 : கல்விக்கட்டண கொள்ளை

தீர்மானம் - 15 : மாநிலங்களவைத் தேர்தல் - பா.ம.க. புறக்கணிப்பு

தமிழ்நாட்டில் கடந்த 2011&ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, எதிர்காலச் செயல் திட்டங்கள் குறித்து விவாதிப்பதற்காக 27.07.2011 அன்று சென்னையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் இனி வரும் காலங்களில் திராவிடக் கட்சிகளுடனோ அல்லது தேசியக் கட்சிகளுடனோ கூட்டணி அமைப்பதில்லை என்றும், ஒத்த கருத்துள்ள கட்சிகள் மற்றும் சமுதாய அமைப்புகளுடன் இணைந்து தனி அணியை ஏற்படுத்தி போட்டியிடுவது என்றும் முடிவெடுக்கப் பட்டது. பாட்டாளி மக்கள் கட்சியின் இந்த முடிவு அனைத்து தரப்பு மக்களிடமும் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் செல்வாக்கும் பெருமளவில் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்கு 6 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் 27-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் தங்களுக்கு ஆதரவளிக்கும்படி போட்டியிடுகின்ற சில கட்சிகள் எங்களுக்கு கோரிக்கை விடுத்தன. இதுகுறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அக்கூட்டத்தில் பேசிய அனைவரும் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தனித்துப் போட்டி என்ற முடிவில் உறுதியாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். நிர்வாகக் குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் குறித்து இன்றைய செயற்குழு கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. நிர்வாகக்குழு கூட்டத்தில் காணப்பட்ட அதே உணர்வே இன்றைய செயற்குழு கூட்டத்திலும் வெளிப்பட்டது.

மாநிலங்களவைத் தேர்தலில் யாரையும் ஆதரிக்காமல், புறக்கணிக்க வேண்டும் என்று செயற்குழு உறுப்பினர்கள் வலியுறுத்தினர். மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களின் கருத்தை ஏற்று வரும் மாநிலங்களவைத் தேர்தலில் எந்தக் கட்சியையும் ஆதரிப்பதில்லை என்றும், மாநிலங்களவைத் தேர்தலை புறக்கணிப்பது என்றும் செயற்குழு கூட்டம் ஒரு மனதாக முடிவெடுக்கிறது.



Sunday, 26 May 2013

மக்களுக்கான போராட்டங்களை செய்தது யார்????? செய்வது யார்?????













மக்களுக்கான போராட்டங்களை வெளிக்காட்டிக்கொள்ளாமல்
செய்தது யார்????? செய்வது யார்?????

மதுவை ஒழிக்கப்போகிறேன் என்று ஜெயலலிதா வீட்டின் பக்கம் நடந்துசென்று கூட்டணியை உறுதிபடுத்தி கொண்ட வைகோ போன்றவர்களுக்கு மத்தியில் தனது சுய பணத்தை கொண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தேசியசாலைகளிலுள்ள மதுக்கடைகளை மூடிய நல்ல மனிதர் மருத்துவர்.ராமதாஸ்...

ஆனால் பாமக கட்சியினர் தான் குடிக்கின்றனர்,,,
மருத்துவர் தான் வன்முறையை தூண்டுகிறார்
என்று காழ்புணர்ச்சியுடன் சொல்லிவருகிறது,,
#நீதிமன்றம் சொன்ன மதுக்கடைகளை
இன்னமும் மூடாத ஜெயலலிதா அரசு


வன்னித்தமிழன்