Tuesday 17 September 2013

செப்டம்பர் 17 - சமூகநீதி நாள் - ஈ.வே.ரா

செப்டம்பர் 17 - சமூகநீதி நாள் - ஈ.வே.ரா
====================================
 
 "எப்போது ஒருவனுக்கு, அவனுக்கு என்று ஒரு மதம், ஒரு சாதி, தனி வகுப்பு என்பதாகப் பிரிக்கப்பட்டதோ, பின்பு - அவன் தனது மதம், சாதி, வகுப்புக்கு என்று உரிமை கேட்பதில் என்ன தப்பிதமோ, அயோக்கியத் தனமோ இருக்கமுடியும்?

வகுப்பையும், மதத்தையும், சாதியையும் ஒருபுறம் காப்பாற்றிக் கொண்டு - மற்றொரு புறத்தில் சாதி, மத, வகுப்புப் பிரதிநிதித்துவம் கேட்பதை அயோக்கியத்தனம் என்று சொன்னால், அப்படிச் சொல்வது ஆயிரம் மடங்கு அயோக்கியத்தனமும், இரண்டாயிரம் மடங்கு இழிதன்மையும், வஞ்சகத் தன்மையும் துரோகத் தன்மையும் ஆகாதா என்பதோடு இது தங்கள் வயிற்றுப் பிழைப்புக்கும், வாழ்வுக்கும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கின்ற கீழ்மக்கள் தன்மையல்லவா அது?"

...'வயிற்றுப் பிழைப்புக்கு எச்சில் இலை பொறுக்கும் இழி தன்மை' என்று ஏன் சொல்லக்கூடாது? தன்பங்கைத் தனக்குக் கொடு என்று கேட்டவுடன் கொடுக்கமறுத்த குடும்பங்கள் எல்லாம் நாசமுற்றே இருக்கின்றன. ஆகவே, எந்த மத, சாதி, வகுப்பாருடைய பங்கையானாலும் மறுத்து ஏமாற்றப் பார்த்தால் கண்டிப்பாக அந்த நாடு கேடுறுவது திண்ணம்"

- தந்தை பெரியார் (8.11.1931 குடிஅரசு தலையங்கம்)

அனைத்து சாதியினருக்கும் அவரவர் மக்கள் தொகைக்கேற்ப இட ஒதுக்கீடு கேட்டு உயிர்த்தியாகம் செய்த 21 வன்னிய வீரத்தியாகிகளுக்கு "வீரவணக்கம்.."

No comments:

Post a Comment