Tuesday 30 April 2013

ஒரே சமூகத்தில் ஒற்றுமை இல்லாமையால் அழிந்த தென்னார்க்காடு மாவட்ட வன்னியர் பாளையம் : உருப்படியம்மன் கதை

ஒரே சமூகத்தில் ஒற்றுமை இல்லாமையால் அழிந்த தென்னார்க்காடு மாவட்ட வன்னியர் பாளையம் : உருப்படியம்மன் கதை


தென்னாற்காடு மாவட்டத்தில் வன்னியர் பாளையங்கள் பல இருந்தன.சக வன்னிய பாளையக்காரர் இருவர் செய்த தீங்கினால் அழிந்த பாளையைம்தான் "தென்குத்து".


"வெற்றிக்களித்த வீரமிண்டார்" எனும் பட்டம் பெற்ற அப்பாளையக்காரர் மரபு எங்கோ ஒரு மூலையில் ஒரு கிராமத்தில் முடங்கிக் கிடக்கிறது. படிப்பவரை கண் கலங்க வைக்கும் சோக வரலாறு கொண்டதுதான் "தென்குத்து".

ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அவ்வினத்தைச் சார்ந்த மக்களை அழிக்க வேண்டியதில்லை.மாறாக அவர்களை சுற்றியுள்ள வரலாற்றுத் தடயங்களை அழித்தாலே போதும்.அவ்வினம் முகவரியற்றுப் போகும்.
எனவே தான் விலை மதிப்பற்றவையாக விளங்கும் வரலாற்றுத் தடயங்களை பாதுகாக்க வேண்டும்.என்ற உறுதி மொழியை ஒவ்வொரு தமிழனும் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இன்று உள்ளோம்.

சுமார் 4500 ஆண்டுகால வரலாற்றுப் பாராம்பரியத்தையும் ,33000 சங்கப் பாடல்களையும் 2900 கல்வெட்டுக்களில் இனப்பதிவு பெற்றும் பண்டைய காலத்தில் எகிப்து வரை சென்று வர்த்தக பிணைப்பை ஏற்ப்படுத்தியதோடு அல்லாமல் 2300 ஆண்டுகால மொழியியல் வரலாற்றினையும் கொண்ட பெருமைக்குரிய நம் இனம் பல்வேறு காலக்கட்டங்களில் பல்வேறு விதமான ஒடுக்கு முறைகளுக்கு ஆட்பட்டாலும் நம்மிடையே அவ்விப்பொழுது ஒரு குடிதாங்கித் தலைவன் தோன்றி தமிழனின் இழந்த பண்பாட்டியல் கூறுகளை மீட்டெடுக்கும் பணியை செய்து வருகிறார்கள்.

இத்தன்மையியல் கூறுகள் ஒரு தலைவனிடத்தில் மட்டும் இருந்தால் போதாது.அது அவனைச் சார்ந்த சமுகத்திடமும் இருத்தல் வேண்டும்.என்ற அடிப்படையில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக வரலாற்றுத்துறை கடலூர் மாவட்டத்தில் மறையும் நிலையில் உள்ள கிராமப்புற சிறு தெய்வங்களை பற்றிய அரிய தகவல்களை தொகுத்து வருகிறது.

அதன் அடிப்படையில் இக்குழுவினர் சமீபத்தில் இம்மாவட்டத்தில் உள்ள சந்தைவெளிப் பேட்டை என்ற ஊரின் கிராமப்புற தெய்வமான உருப்புடியம்மன் பற்றிய பல அரிய வரலாற்றுத் தடயங்களைத் தொகுத்துள்ளனர்.


சந்தைவெளிப்பேட்டை:

கும்பகோணம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வடலூரில் இருந்து 3 கி.மீ தொலைவில் இவ்வூர் அமைந்துள்ளது.குறிப்பாக புதிய வீராணம் நீரேற்றும் நிலையத்திற்கு தென்புறத்தில் சந்தைவெளிப்பேட்டை அமைந்துள்ளது.

இவ்வூரைப் பார்ப்பதற்கு குக்கிராமமாக இன்று தோன்றினாலும் சுமார் 2300 ஆண்டுகால வரலாற்றினை தன்னத்தே கொண்டுள்ளது. குறிப்பாக இவ்வூரில் இரும்புக்கால பண்பாட்டின் எச்சங்களும் பிற்கால சோழர் காலத்தின் கலைப்படைப்புகளும் நாயக்கர் காலத்திய வரலாற்றுத் தடயங்களையும் தன்னுள் தாங்கியுள்ளது.

இவ்வளவு சிறப்புமிக்க சந்தைவெளிப்பேட்டையின் காவல் தெய்வமாக விளங்கும் உருப்புடி அம்மன் வழிபாடு இப்பகுதி மக்களிடையே ஐக்கியப்படுத்தப்பட்ட ஒன்றாக உள்ளது.

உருப்புடி அம்மன் கோவில்:

சந்தைவெளிப்பேடை கிராமத்தின் உயிர்நாடியாக விளங்கும் பெரிய வாய்க்காலின் வடக்கு கரையில் மரங்கள் மற்றும் புதர்கள் நிரம்பிய பகுதியில் உருப்புடி அம்மன் கோவிம் அமைந்துள்ளது.இன்று இப்பகுதியின் காவல் தெய்வமாகவும் இப்பகுதி மக்களின் குடும்பதெய்வமாகவும் விளங்குகிறாள்.மேலும் இவ்வம்மன் தெய்வமாக்கப்பட்ட பின்னனியில் கூறப்படுகின்ற கதையில் ஒர் அற்புதமான வரலாற்றுப் பின்னனியுள்ளது.


தென்குத்துப்பாளையம்:


பொதுவாக பாளையக்காரர்கள் முறையானது தமிழகத்தில் கி.பி.16 ஆம் நூற்றாண்டில் மதுரை நாயக்க வம்சத்தின் முதல் மன்னனாக திகழ்ந்த விசுவநாத நாயக்கரின் அமைச்சரான அரிய நாத முதலியாரால் அறிமுகப்படுத்தபட்டதாகும்

உருப்புடி அம்மனின் முன்னோரான வெற்றி களித்த வீரமுண்டனர் பரம்பரையினரே சோழர் காலம் முதல் இப்பகுதியின் தனிப்பெரும் நிலமானிய தலைவர்களாக விளங்கி வந்தனர்.

கி.பி 16 ஆம் நூற்றாண்டில் சந்தைவெளிப்பேட்டை பகுதி நாயக்க மன்னர்களின் ஆட்சியின் கீழ் வந்தது.இப்பகுதி வடக்குத்துப் பாளையம் தெக்குத்துப்பாளையம் என மூன்று பாளையங்களாக பிரிக்கப்பட்டன.தென்குத்து பாளையம் வீரமுண்டனாரின் வாரிசிடம் ஒப்படைக்கப்பட்டது.

கி.பி 17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழகத்தில் நாயக்க மன்னர்களின் அட்சி முடிவிற்கு வந்தது.அதன் பிறகு இப்பகுதிகள் அனைத்தும் ஆர்காட் நவாப்பின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.

வன்னியரால் அழிந்த வன்னியர் பாளையம்(con)
இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட வடக்குத்து மற்றும் கீழுர் பாளையக்காரர்கள் தங்களது வரிவசூலை நேரடியாக ஆர்காட் நவாப்பிடம் வழங்கினார்.இதன் மூலம் நவாப்பின் அன்பிற்குப் பாத்திரமாக விளங்கினார்.இதனால் இவ்விரு பாளையக்காரர்களும் சேர்ந்து தென்குத்துபாளையக்காரரான வீரமுன்லனாரின் வாரிசுகளை மதிக்காமல் அவ்வப்போது தவறான செய்திகளை நவாப்பிடம் கூறிவந்தனர்.

இதனால் ஆத்திரம் முற்ற ஆர்காட் நவாப் தென்குத்துப்பாளைக்காரரை வரி என்கிற பெயரில் தொல்லை கொடுக்கலானார்.மேலும் பாலைத்தின் உரிமைகளை பறிக்க போவதாகவும் கூறினார்.இதனால் அத்திரமுற்ற வீரமுண்டனாரின் வாரிசுகள் அர்காட் கொடுத்து வந்த வரியினை நிறுத்தி வந்தனர்.

இதனால் ஆர்காட் நவாப் வடக்குத்து கீழுர் பாளையக்காரர்களின் ஆலோசனைப்படி படையை அனுப்பி தென்குத்துபாளையத்தின் உரிமையைப் பறிக்கும் நோக்கில் தலைமையை கைது செய்து வரும் படி அனுப்பினான்.நவாப்பின் படை வீரர்கள் தென்குத்து பாளைய தலைவனை சந்தித்து தமது மன்னன் கூறிய செய்திகளைக் கூறினார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சியுற்ற பாளையத் தலைவன் நாளை போரில் சந்திப்பதாக கூறினான். மறுநாள் காலை இருந்த சொற்ப்பவீரர்களைக் கொண்டு நவாபி வீரர்களைத் தாக்க முற்பட்டார்.

இதற்கிடையே கீழுர் வடக்குத்து பாளையக்காரர்கள் நவாப்புடன் சேர்ந்து தென்குத்து பாளையத் தலைவரை எதிர்த்தனர்

அரண்மனை முழுவதும் சூறையாடிய நவாப்பின் படைவீரர்களுக்கு அஞ்சித் தென்குத்துப் பாளையத்தலைவனின் பெண்டிர் ஒடி தப்பினர்.இவர்களை விரட்டிக் கொன்றனர் நவாபின் வீரர்கள்.

தென்குத்துப் பாளையத் தலைவனின் மகள் நிறைமாத கற்பினி இவள் தமது தலைப்பிரசவத்திற்காகத் தந்தை வீட்டிற்கு வந்திருந்தாள்.இவளையும் விட்டு வைக்கவில்லை எதிரிப்படையினர்.தமது உயிர் போனாலும் பரவாயில்லை மக்களின் உயிர் காப்பாற்ற பட வேண்டும் என்பதற்காக நவாபின் மேலாண்மையை ஏற்று வீரர்களிடம் சரன் அடைவதே மேல் என்று தம் தந்தையிடம் கூறிப் போரை எப்பிடியாவது நிறுத்தி விட வேண்டும் எனக் கருதி தந்தையை தேடிப் போர்க்களம் புறபட்டாள்

அங்கே அவளை சுற்றி வளைத்த நவாபின் வீரர்கள் அவளை கொன்றனர்.இதனை அறிந்து தென்குத்துப்பாளைய தலைவன் மகளே இறந்த பிறகு பாளையம் எதற்கு எனக்கூறி தனது பாளையத்தைப் பிரித்து வடகுத்து,தென்குத்து மக்களுக்கு ஆளுக்குக்கால் காணி வீதம் கொடுத்து விட்டு அப்பகுதியை விட்டு குடிபெயர்ந்து விட்டதாகக் கூறப்படுகிறது.

மேற்கூறிய செய்திகளை எங்களுக்கு நேர்க்காணலின் பொழுது கூறிய வெற்றிக் களித்த வீரமுண்டனாரின் தற்போதைய வாரிசான செந்தாமரைக்கண்ணராயர் இதனைப் பாடலாகக் கூறுகிறார்.

தம் இனம் காக்க முற்பட்ட தம் மகள் கொடுரமாக கொல்லப்பட்டமையால் அவளை இன்று வரை அவ்வாரிசுகள் உருப்புடியம்மன் என்ற பெயரில் தம் குலதெய்வமாக வணங்கி வருகின்றனர்.

இவ்வாறு தென்குத்து பாளையத்தலைவனின் மகள் கொடுரமாகக் கொல்லப்பட்ட அவ்விடத்தை இன்றும் இவ்வூர் மக்கள் கருவருத்தான் கரம்பு என்று அழைக்கின்றனர்.பொதுவாக தமிழர்கள் இடத்தே ஒரு பாரம்பரியம் உண்டு.ஒரு பெண்னைக் கொன்றால் அப்பாவம் ஏழேழு தலைமுறையை தாக்கும் என்பார்கள்

அதனால்தான் என்னவோ அவள் ரத்தம் பட்ட இடம் இன்று வரை கரம்பாகவே காட்சி அளிக்கிறது.சாபம் மனிதர்களுக்கும் மட்டும் அல்ல மண்ணுக்கும் உண்டு போலும்.

கோட்டைமேடு:

சந்தவெளிப்பேட்டையில் இருந்து பெரிய வாய்க்காலுக்கு செல்லும் வழியில் கோட்டை மேடு என்ற பகுதி உள்ளது.இன்று சாலை அமைக்கப்பட்டுள்ளது.எஞ்சிபகுதியில் கள ஆய்வு செய்த பொழுது சாலை அமைக்க மண் எடுக்க பட்ட பள்ளத்தில் கூரைக்காக பயன்படுத்தபட்ட ஒடுகள் மற்றும் மண்ட்பாண்ட ஒடுகள் ஏராளமாக காணப்பட்டன.மேலும் 216 செ.மீ அளவுள்ள செங்கற்கள் உடன் கூடி கட்டடப்பகுதி ஒன்று கண்டப்பட்டது

இவற்றை அய்வு செய்த பொழுது அக்கட்ட பகுதி கி.பி.11-12-ஆம் நூற்றாண்டை சார்ந்தவையாகும்.மேலும் இங்கு சேகரிக்கப்பட்ட கூரை ஒடுகளின் அமைப்பு கங்கைக் கொண்ட சோழபுரம் மாளிகை மேட்டுப்பகுதியில் நடைபெற்ற அகழாய்வில் கிடைத்துள்ள கூரை ஒடுகளின் அமைப்பை ஒத்துள்ளது.எனவே இங்கு கிடைத்துள்ள கலைப்பொருட்களும் ஒடுகளும் சோழர்க்காலத்தை சார்ந்தவையாகும்.இப்பகுதியில் இருந்த அரண்மனை வெற்றி களித்த வீரமுண்டனார் உடையதாகவும் இருக்கலாம்.

உருப்புடியம்மன் சிலை:

பெரியவாய்க்காலின் வடகரையில் அம்மன் கோவில் சமீபத்திலிருக்கும் அம்மன் சிலை 300 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும்.

செவ்வகவடிவத்தினால் ஆன எளிய பீடத்தின் மீது சுகாசனத்தில் அமர்ந்த நிலையிலும் தலைமுடி சவாளகேச அமைப்பில் பரந்து காட்டப்பட்ட நிலையிலும் காதில் பத்ரகுண்டலம் கழுத்தில் எளிய ஆரம்,சரப்பளி மற்றும் தோள்வலை காலில் பாதசரம் மெல்லிய முப்பிரி நூல் போன்றவைகளும் கிழாடை மெல்லிய மடிப்புகள் உடனும் மேலிரு கரங்களின் வலது கரத்தில் கபாலமும் கணப்படுகிறது.

மேலும் சிலையில் மார்புக் கச்சை இல்லை.இச்சிலையின் உடல் அமைப்பில் பிற்கால சோழர் பாணியை போன்று காணப்பட்டாலும் சிற்பத்தின் அணிகலன் ,ஆடை வடவமைப்பு ,முகம் ,கை,கால்,கூரியநாசி போன்ற அமைப்புகளின்கி.பி-17-ஆம் நூற்றாண்டின் கலைப் பாணியின் தாக்கமே அதிகம் காணப்படுகிறது.

இதன் மூலம் உருப்புடியம்மன் வழிபாடு கி.பி 17-ஆம் நூற்றாண்டில் இருந்து தொடங்கி இருக்கலாம்.என்பதை அறிய முடிகிறது.


மேலும் உருப்புடி அம்மன் தெய்வமானதற்கு பின்னனியில் கூறப்படுகின்ற வரலாறு நிகழ்வுகளை தனியாகப் பிரித்துப் பார்த்தால் ஏதோ புராணக்கதை போல் தோன்றும்.

மாறாக சந்தைவெளிப்பேட்டை கோட்டை மேடு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட செங்கல்,பானை ஒடுகள் கூரைக்காக பயன்படுத்தப்பட்ட ஒடுகள்,கல்வெட்டு சண்டிகேஸ்வரர் சிலை சிவலிங்கங்கள் போன்றவைகளை வைத்துப் பார்க்கும் பொழுது சோழர் காலத்தில் இப்பகுதியின் தலைவனாக வெற்றி களித்த வீரமூண்டனார் இருந்தது உண்மையாகவே தோன்றுகிறது.

மேலும் கி.பி 16 ஆம் நூற்றாண்டில் வடக்குத்து பாளையக்காரரான சமுட்டியார் ஒருவர் இருந்தார்.என்பதை சேலம் செப்பேட்டின் மூலம் அறிய முடிகிறது.எனவே தென்குத்துப் பாளையம் இருந்ததாக கூறப்படுவது கர்ணப்பரம்பரை கதையாக நமக்கு தோன்றினாலும் வடக்குத்துப் பாளையம் இருந்தது ஆணித்தரமான உண்மையே.


ஆர்காட் நவாப் தென்குத்து பாளையத்தை கைப்பற்ற நினைத்து தம் வீரர்களை அனுப்பியது இருவருக்கும் இடையே சண்டை நடைபெற்றது எல்லாம் உண்மையாக இருக்குமோ என்ற கேள்விக்கு விடைகளாக விளக்குபவையாதென்றால் இப்பகுதியில் காணபடுகின்ற சிலைகள் சிவலிங்கங்கள் அனைத்தும் சிதைக்க பட்ட நிலையிலே காணப்படுகின்றன.

மேலும் இவ்வூருக்கு அருகாமையில் உள்ள பெரியக் கோவில் குப்பம் என்ற ஊரில் பெயரில் தான் கோவில் சிலைகள் மற்றும் கோவில் இருந்ததற்கான தடயங்கள் மட்டுமே காணப்படுகின்றன.இவைகளை வைத்து பார்க்கும் பொழுது சந்தைவெளிப்பேட்டை,கோவில் குப்பம் ஊர்களில் இருந்த சோழர்கால கோவில்கள் கண்டிப்பாக இப்பகுதியில் நடைபெற்ற போரினால் அழிக்கப்பட்டிருக்கலாம்.மேலும் வெங்கடாம்பேட்டையில் நவாப் கட்டியதாகக் கூறப்படும்மசூதி ஒன்று இன்றும் உள்ளது.


எனவே சந்தைவெளிப்பேட்டையில் வெற்றிகளித்த வீரமுண்டனார் அவரது வாரிசான உருப்புடியம்மன் ஆகியோர்களின் வாழ்க்கை வரலாறு கதைகளாக இப்பகுதியில் உலாவினாலும் அவர்கள் வாழ்ந்தது உண்மையே என வரலாற்று சான்றுகள் நிரூபித்துள்ளன

நன்றி: தமிழோசை
நன்றி: திரு சுவாமி

கௌண்டர் பட்டம் பற்றிய ஒரு ஆய்வு

கௌண்டர் பட்டம் பற்றிய ஒரு ஆய்வு:
காமிண்டன் என்ற சொல்லே  பிற்காலத்தில் கௌண்டர் என திரிந்தது என்பது அனைவரும் அறிந்தது . இன்று தமிழகத்தில் பல சாதிகள் இந்த பட்டம் கொண்டு அழைக்க படுகிறார்கள் . உதாரணமாக கொங்கு வெள்ளாளர்கள் “கொங்கு வெள்ளாள கௌண்டர்” என்று  (கோவை, நாமக்கல் ,ஈரோடு ) போன்ற இடங்களிலும், வன்னியர் குல க்ஷத்ரியர்   தமிழ்நாடு முழுதும் 
கொங்கு நிலத்தையும் சேர்த்து கௌண்டர் பட்டம் கொண்டுள்ளனர்

உண்மையில் இந்த பட்டம்  எந்த சாதி எந்த காலம் முதல் இந்த பட்டங்களை முறையே பெற்று உபயோகிக்கிறது என்பதை பற்றிய கட்டுரை இது .
பொதுவாக தலைமை பொறுப்பை நாயகர், படையாட்சி,  கௌண்டர், தேவர் என்ற பட்டங்கள்  கௌரவ ரீதியாகவும் ,தலைமை பொறுப்பை குறிப்பதாகவும் இடத்திர்க்கேர்ப்ப அழைக்கபடுகிறது. அதுபோல கொங்கு நிலத்தில் தலைமை பொறுப்பை  கௌண்டர் என்று அழைக்க படுகிறது .

இப்போது நமக்கு கிடைத்த கல்வெட்டு ஆதாரம் படி ,இவர்களுக்கு காமிண்டன் (கௌண்டர் ) பட்டம் வந்த காலத்தை பார்ப்போம் .
==================================================================

வன்னிய கௌண்டர் (அல்லது ) பள்ளி காமிண்டன் : 

((வன்னிய கௌண்டர்கள் பற்றிய செய்திகள் எனக்கு கிடைக்க வழி செய்த அண்ணல் கண்டர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.))
தமிழகத்தில் கிடைத்த கல்வெட்டு ஆதாரம் படி காமிண்டன்(கௌண்டர் ) என்னும் பட்டம் முதலில் பத்தாம்  நூற்றாண்டில்தான் கிடைத்திருக்கிறது . அதும் சோழ மன்னர்கள் வன்னியர்களுக்கு கொடுத்த பட்டமாக உள்ளது .

1. ஆயிரம் ஆண்டு ஏரி கல்வெட்டு : 
     தருமப்புரி பகுதியில் கிடைக்கும் நடுக்கற்களில் “காமிண்டன் ” என்ற சொல் பயின்று வர         காண்கிறோம் .

காமிண்டன் என்ற சொல் வன்னியர்கலையே குறிக்கிறது , இதற்க்கு             ஏராளமான கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன . இவற்றில் ஒரு கல்வெட்டு உலகத் தமிழாயிச்சி நிறுவனம் வெளியிட்ட “தமிழில் ஆவணங்கள் ” என்ற நூலில் முனைவர் .கொடுமுடி சண்முகன் அவர்கள் எழுதிய “ஏரிகளில் கள் ஆவணங்கள் “ என்ற கட்டுரையில் (பக்கம் 37) வெளியிடப்பட்டுள்ளது .
அதனை அப்படியே கீழே கொடுத்துள்ளோம் .


ஆயிரம் ஆண்டு ஏரி :
ஓமலூர் –தருமபுரி சாலையில் பூசாரிப்பட்டி அருகில் உள்ளது . தாச சமுத்திரம் எரி , பேரரசன் ராசராசனின் பதினொன்றாம் ஆட்சி ஆண்டில் இந்த எரி கட்டப்பட்டது . கி.பி .996 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த எரி தற்போது ஆயிரம் ஆண்டைக் கடந்து விட்டது .
ஏரியை அமைத்தவர் கச்சிப் பள்ளி காமிண்டன் (வன்னியர் ) பெங்கிலன் அமைந்தான் களி . அவனும் அவன் தம்பியும் கூட இருந்து வேலை செய்துள்ளனர் . இந்த ஏரியை அழியாமல் காப்பவர்களில் “கால் என் தலைமேல் ” என்கிறான் . இதற்க்கு அவர்களும் பாதம் பணிவேன் என்று பொருள்படும் .

“ஸ்வஸ்தி ஸ்ரீ
ராஜ ராஜ சோழ தேவற்கு
திருவேழுத்திட்டுச் செல்லா நின்ற
திருனல்லியாண்டு பதிநொற்றாவது
வடபூவாணிய நாட்டு
கச்சிப் பள்ளிக் காமிண்டந்
பொங்கிலந் அமன்தாந் களியும்
எந்தம்பி................ம்
இவ்விருவே மெங்கள் கைய்யால்
மணலொழிக்கி இவ்வேரி கட்டிநோம்
இந்த நம் அழிவு படாமற் காத்தாந்
காலெந் தலை மேலென “
என்று முனைவர் . கொடுமுடி சண்முகன் அவர்கள் தனது நூலில் குறித்துள்ளார் .
காமிண்டன் அதாவது கவுண்டன் என்ற பட்டப் பெயர் கொண்ட வன்னியர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முபே ஏரியை வெட்டி போது மக்களுக்கு நன்மை புரிந்துள்ளனர் .

2 .நடுக்கற்கள் :

காமிண்டன் என்ற பட்டப்பெயர் கொண்ட வன்னியரை பற்றி  இன்னொரு கல்வெட்டு , தருமபுரி மாவட்டம் குண்டூரப்பன் கொட்டாய் என்ற ஊரில்  உள்ள நடுகல் ஒன்றில் காணப்படுகிறது . கி.பி . 1045 ஆம் ஆண்டு பொறிக்கப்பட்ட இந்தக் கல்வெட்டில்

"பனை குளத்துப் பள்ளியில் பள்ளிகாரன் புளியக்காமுண்டன் மகன் வசவக்காமுண்டன்"

மகள் பெயர் அதில் காணப்படுகிறது .
தமிழ் நாடரசின் தொல்லியல் துரை வெளியிட்ட தருமபுரி மாவட்டக் கையேடு என்ற நூலில் (பக்கம் 176) இக்கல்வெட்டு செய்தி அதில் வெளியிடப் பட்டுள்ளது .

3.  கிருஷ்ணகிரி அருகே ஜகதாப் மேட்டூரில் காணப்பெறும் பலகைக் கல்லில்   உள்ள ஒரு               கல்வெட்டுச் செய்தியை ஆவணம் (இதழ்- 12 .ஜூலை 2001, பக்கம் 21), தொன்மைத் தடயம் (2003) ஆகிய நூல்கள் வெளியிட்டுள்ளன .
இக்கல்வெட்டு சோழ மன்னன் இரண்டாம் ராஜேந்திரனின் ஐந்தாம் ஆட்சியாண்டில் (கி.பி . 1059) வெட்டப்பட்டுள்ளது .

இதில்

“விஜயராஜேந்திர மண்டலத்துத் தகடூர் நாட்டுக்குக் கனக நாட்டுப் புள்ள மங்கலத்து அவனமச்சி பள்ளியான இவன் மகன் காமுண்டன் பாம்பு கடித்து செத்தான் . அது கண்டு அவனது மனவாட்டியும் , காமுண்டனின் தாயுமான விச்சக்கந் என்பாள் தீப்பாயிந்து உயிர் நீத்தாள் ”

என்ற செய்தி இடம் பெற்றுள்ளது . அவளது நினைவாக இந்த வீரக்கல் நடப்பட்டுள்ளது.

4. வன்னியர்களுக்கு நீண்ட நெடுங்காலமாக கவுண்டர் பட்டம் உண்டு என்பதார்க்கு மேலும் பல  ஆதாரங்கள் உள்ளன .

இது தொடர்பாக தமிழ்நாடரசின் தொல்லியல் துறையில் பணியாற்றும் கல்வெட்டாய்வாளர் முனைவர் , சொ .சாந்தலிங்கம் அவர்கள் “வரலாற்றில் தகடூர் ” என்ற நூலில் (பக்கம் 192-193) கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார் .
“கி.பி 11-13 ஆம் நூற்றாண்டளவில் பல இடங்களில் நாட்டுக் காமுண்டர்கலாகவும் , ஊர் முதலாளிகலாகவும் விளங்கியவர்கள் வன்னியர்களே .
இந்தப் பிரிவினரைப் பற்றிய குறிப்புக்கள் 11 ஆம் நூற்றாண்டு முதல் 18 ஆம் நூற்றாண்டு வரை தொடன்ர்து கிடைக்கின்றன . இவற்றில் இவர்கள் காமிண்டர் , காமுண்டர் , கவுண்டன் என திரிபு பெற்று வழங்கப்படுகின்றனர் . கி.பி. 15 ஆம் நூற்றாண்டிலேயே “கவுண்டர் ” எனத் தெளிவாக அழைக்கப்பட்டுள்ளனர் . இவர்களே பெரும்பான்மையும் நில உடைமையாலர்கலாகவும் வேளாண் தொழிலில் ஈடுப்பட்டவர்கலாகவும் இருக்கின்றனர் .”

கோவில் நிலக் கொடிகள் பற்றி இப்பகுதியில் கிடைக்கின்ற கல்வெட்டுகளில் 90 சதவிகிதம் பள்ளி கவுண்டர் கொடுத்தனவாகவே இருக்கின்றனர் .
ஒரு சான்று மட்டும் செட்டி இனத்தைச் சேர்ந்தவர் அளித்ததை கூறுகிறது என்று முனைவர் திரு .சொ .சாந்தலிங்கம் எழுதியுள்ளார்

5.செப்புப் பட்டயங்கள் :

வன்னியர்களுக்கு கவுண்டர் பட்டம் உண்டு எனபதற்கு செப்புப் பட்டய ஆதாரங்களும் இருக்கின்றன . கொங்கு வெள்ளாளர் சமூகத்தை சேர்ந்த புலவர் .செ .ராசு (மேனாள் பேராசிரியர், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் )அவர்கள் , கி.பி .1595 ஆம் ஆண்டைச் சேர்ந்த பண்ணாட்டார் எனப்படும் வன்னியர் செப்பு பட்டயத்தை படித்துள்ளார் .

இதனை “வன்னியர் ” என்ற நூலில் தொல்லியல்துறையின் முன்னாள் இயக்குனர் திரு.நடன காசிநாதன் அவர்கள் வெளியிட்டுள்ளார் .

அதில் பல கவுண்டர்களின் பெயர்கள் இடம் பெறுகின்றன .

“சென்னியார் கவுண்டர் ,சீராம கவுண்டர், செங்கழுநீர் கவுண்டர், வேடிச்சி கவுண்டர், நமனாண்டி கவுண்டர், நாரீசர் கவுண்டர், அம்பாயிர கவுண்டர் ” என நூற்றுக்கும் மேற்ப்பட்ட கவுண்டர்களின் பெயர்கள் எந்த செப்புப் பட்டயத்தில் காணப்படுகின்றன . 

6.  கி.பி 1633 ஆம் ஆண்டைச் சேர்ந்த நெய்வேலி வன்னியர் செப்பேட்டை திரு.நடன காசினாதன் அவர்கள் ‘கல்வெட்டு ’
காலாண்டிதழ் எண் 22 இல் பதிப்பித்துள்ளார் .அதில் அழகாபுரம் மெயபோகராய கவுண்டர் ,
சேலம் முதலிக் கவுண்டர் ,அனதாரிப்பட்டி அனதாரிக் கவுண்டர் ,, அயோத்தியாப் பட்டினம் தெய்வராயக் கவுண்டர் , ஒலைப்புடையார் காங்கய குருக்கவுண்டர் , கந்தப்பம்பட்டி கந்தப்ப கவுண்டர் , சீரகப்பாடி நல்லரிசாக் கவுண்டர் , சென்னகிரி ஒட்டைநாழி பாரிசாக்கவுண்டர் , வீரபாண்டி முந்திச் சின்னாக் கவுண்டர் , பாலம்பட்டி வடமலை கவுண்டர் ,மல்லூர் மாணிக்க கவுண்டர் , அண்ணாமலைப் பட்டி சேர்வை முத்தாக் கவுண்டர் , பொன்பரப்பி பெரிய குப்ப கவுண்டர் ,அம்மாபாளையம் ஆட்டையாம்பட்டி ராயகவுண்டர் ,வெங்காப்பட்டி குழந்தை
கவுண்டர் ,வாழைக் குட்டைப்பட்டி பத்திரிக் கவுண்டர் ,அம்புக்கட்டி பாளையம்குட்டையாக் கவுண்டர் போன்ற நூற்றுக்கும் மேற்ப்பட்ட வன்னிய கவுண்டர்களின் பெயர்கள் இப்பட்டயத்தில் இடம் பெற்றுள்ளன .
இவை அனைத்தும் நெய்வேலி வன்னியர் செப்பேடு சொல்லும் பள்ளி கவுண்டர்கள்

7. மேலும் ஆ.சிங்காரவேல் முதலியார் எழுதிய அபிதான சிந்தாமணியில் (பக்கம் 375 )

கவுண்டர் என்ற சொல்லுக்கு –“பள்ளிகளுக்கும், சில இடங்களில் வெள்ளாளர்களுக்கும் பட்டப் பெயரை இருக்கிறது ” என்று கூறப்பட்டுள்ளது .

8. வன்னிய கவுண்டரும் சித்தாண்டபுரம் செப்பேடும் :"சித்தாண்டபுரம் செப்பேடு"
வன்னிய கவுண்டர்களின் வீரத்தையும்,துணிவையும் இச்செப்பேடு உணர்த்துகிறது.இதில்  உள்ள சில சுவையான சில பகுதிகள் உங்கள் பார்வைக்கு.                                                                                                                                                      "சிறுதலை பூண்டியிலிருந்து ஒலகளந்த கவுண்டனும் யேகாம்பிறி கவண்டனும் ரண்டு பேரும் மேர்க்கே யேரி வறச்சே சிங்கிரி பட்டி கணவாயிலே நூரு வேடராகிறவர்கள் வந்து மறிச்சிக் கொண்டபோது ஒலகளந்தா கவுண்டனும் யேகாம்பிரி கவுண்டனும் இவர்கள் ரண்டு பேரும் அவர்கள் மேல் சண்டைகள் செய்து அவர்களில் நாலு பேரை வெட்டித் துறத்திவிட்டு அப்போ ஆலம்பாடி வந்து சேந்து அந்தக் கோட்டையில் வீட கட்டிக்கொண்டு நிலையாயிறுந்தார்கள்.அப்போ ஆலம்பாடி கோட்டையிலிறுக்கப்பட்ட யிறுப்பாளிநாயக்கன் நீங்களாரென்று கேட்டான் நாங்கள் படையாச்சிகளென்று சொன்னார்கள் ஆனால் நம்பள் பக்கத்திலெ யிறுங்கோளென்று சேத்திக்கொண்டான்

"மற்றொரு பகுதி:

"உலகளந்தா கவண்டனும் ஏகம்பிரி கவண்டனும் ஆலம்பாடி நாட்டையாண்டு
கொண்டிருக்கும் காலத்தில் பெரியப்ப நாயக்கன்,சின்னப்ப நாயக்கன்,பாலப்ப
நாய்க்கன் இவர்கள் வந்து என்களுக்கு வர்த்தனை உங்கள் வீட்டுக்கு ரண்டு பணம்குடுக்கவேண்டுமென்று கேட்டார்கள்.அதுக்கவர்கள் நாங்கள் குடுக்குறதில்லை யென்றார்கள்.நாங்கள் விடுகுறதில்லை என்றார்கள் இவர்கள்.ஆடு மாட்டை கொள்ளை ஓட்டினார்கள் அவர்களில் பத்து வேடரை வெட்டிக் கொள்ளையே திருப்பிக்கொண்டார்கள்.செகதேவராயரண்டை போனார்கள்.பாலப்ப நாயக்கன் எங்கள் வர்த்தனையைக் கேட்டோம்
என்று சொன்னான்.ஏகாம்பிரி கவுண்டன் நாங்கள் வன்னிய வம்ஷம் அப்படி
கொடோமென்றோம்.எங்கள் ஆடுமாடெல்லம் கொள்ளையிட்டார்கள் நாங்கள் அவர்களை பத்துப்பேரை வெட்டி கொள்ளையை திறுப்பிக்கொண்டோமென்றான்.செகதேவராயர் வேடர் கையில் 100 பொன் அபுறாதமாக வாங்கிக்கொண்டு நீங்கள் சவுரியவான்களென்று மெச்சி உங்களுக்கு கென்னா வெகுமானம் வேணுமென்றார் அப்போது ஏகாம்பிரி கவுண்டனெங்களுக்கின்ன சாதி அதிகாரம் வேணுமென்று
கேட்டார்கள்"

வன்னிய கவுண்டரும் சித்தாண்டபுரம் செப்பேடும் :
விளக்கம்:                                                                                                                         சிறுதலைப்பூண்டி என்ர இடத்திலிருந்து உலகளந்தா கவுண்டர், ஏகாம்பர கவுண்டர் என்ற வன்னியர் இருவர் மேற்கு நோக்கி செல்கையில் அவர்களை ஒரு கணவாயினருகே நூறு வேடர்கள் வழி மறிக்கின்றனர்.ஆனால் இவ்விருவரும் அவ்வேடரோடு போரிட்டு அவர்களில் நான்கு பேரைக் கொன்றனர்.இதனைக் கண்ட அந்த
வேடர் கூட்டம் சிதறி ஓடிவிட்டது.இதன் பிறகு இந்த வன்னிய கவுண்டர் இருவரும் ஆலம்பாடி எனும் ஊரில் குடியமர்ந்தனர். ஆலம்பாடி பகுதியை அப்போது ஆட்சி செய்த (தெலுங்கு) இறுப்பாளி நாயக்கன் என்பவன் இவர்களை பற்றிக் கேள்விப்பட்டு இவர்களிடம் யாரென்று கேட்டபோது தாங்கள் படையாட்சிகள் என்று அந்த இரு வன்னியரும் கூறினர்.நீங்கள் எங்களுக்கு உறுதுணையாயிருங்கள் என்று அவர்களை இறுப்பாளீ நாய்க்கன் சேர்த்துக்கொண்டான்.ஆலம்பாடி நாட்டில் உலகளந்தா கவுண்டன்,ஏகாம்பர கவுண்டன் இருவரும் தலைவர்கள் என்ற நிலையில் வலுவுடன் இருந்தபோது (தெலுங்கு) நாயக்கராட்சியின் பிரதிநிதிகளான பெரியப்ப,சின்னப்ப,பாலப்ப நாய்க்கன்கள் இவர்களிடம் வரி கேட்டனர்.கொடுக்கமாட்டோம் என்று மறுத்தனர் வன்னியர்கள். வரி கொடுக்க மறுத்ததால் நாய்க்கர் தமது ஆட்களுடன் வன்னியருடைய ஆடு.மாடுகளை ஓட்டிச் செல்லத் தொடங்கினர்.சினமுற்ற வன்னியர் நாய்க்கர் ஆட்களோடு போர் செய்து அவர்களில் பத்து பேரை வெட்டிக்கொன்று தமது ஆடு மாடுகளை மீட்டுக்கொண்டனர்.இரு தரப்பினரும் பெருமன்னனான செகதேவராயரிடம் சென்று முறையிட்டனர்.பாலப்ப நாய்க்கர் தரப்பினர் இவர்கள் வரி கொடுக்கவில்லை என்றனர்.ஏகாம்பர கவுண்டர் நாங்கள் வன்னியர் குலம் என்பதால் வரி கொடுக்க மறுத்தோம்.எங்கள் ஆடு,மாடுகளை கவர்ந்து செல்ல முயன்றதால் அவர்கள் ஆட்கள் பத்து பேரை வெட்டிக்கொன்றோம் என்றனர்.வழக்கை விசாரித்த செகதேவராயர் பாலப்ப நாய்க்கர் தரப்பிற்கு நூறு பொன் அபராதம் விதித்து பின்னர் ஏகாம்பர கவுண்டர் தரப்பை பாராட்டி உங்களுக்கு என்ன சன்மானம் வேண்டும் என்று வினவ அதற்கு அவர்கள் எங்களுக்கு எங்கள் இன ஜாதி தலைமைப் பொறுப்பு வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். இந்த செப்பேட்டில் ஏகாம்பர கவுண்டர் உள்ளிட்ட பல வன்னிய கவுண்டர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.மேலும் அதில் உள்ள மற்றொரு முக்கிய
செய்தி: ஒரு தேரோட்டத்தின்போது வன்னியர் தங்கள் விருதுகளைப் பயன்படுத்தக்கூடாது என்று வலங்கை ஜாதிகளைச் சேர்ந்தோர் மறித்து பிரச்சினை செய்ய வன்னிய கவுண்டர்கள் தம்மைத் தடுத்த வலங்கை ஜாதியாரை அடித்து துரத்தி தேரோட்டத்தை நடத்தினர்.
ஆக  வன்னியர்களுக்கு பத்தாம் நூற்றாண்டு முதலே கௌண்டர் என்னும் பட்டம் உண்டு என்பதற்கான ஆதாரங்கள் எண்ணற்றவை  . அடுத்து கொங்கு வெள்ளாளர்களை பார்ப்போம்                                                                                                                                                           
========================================================

கொங்கு வெள்ளாளர்கள் :                                                                                                              முல்லை நிலமாதலால், காடும், காடும் சார்ந்த நிலங்களாக கொங்கு காட்சியளித்தது. இங்கு வாழ்ந்த இனக் குழுக்கள், வேடர், ஆயர் மற்றும் எயினர் ஆகும். வேடர்கள் வேட்டைத் தொழிலையும் ஆயர்கள் கால் நடைவளர்த்தல், தினை, வரகு, அவரை, துவரை முதலிய பயிர்களை பயிரிடல் (விண்ணோக்கிய வேளாண்முறை) என்ற முறையில் பொருளாதார வாழ்க்கை இருந்தது. இவர்களுக்குள் கூட்டப்பிரிவுகள் இருந்தன. தாம் வாழும் முறை மற்றும் இடங்களுக்கேற்ப கூட்டப்பெயர்கள் நிலைத்து இருந்தன. திருமணத்திற்கான ஒழுக்க முறை கூட்டங்களிடையே வரையறை செய்யப்பட்டிருந்தது. தமிழகம் முழுவதும் மருத நிலப்பகுதிகளில் இனக்குழு சிதைவடைந்த நிலையில், கொங்கில் மட்டும் சிதையாமல் 12ஆம் நூற்றாண்டு வரையில் நீடித்தது. அது மட்டுமல்ல புறம்போக்கு நிலங்கள் ஏராளமாகவும் இருந்தன.      
                                                       13ஆம் நூற்றாண்டில் சோழ, பாண்டிய அரசுகளின் பொருளாதார தேவை கூடியது. நெல் அதிக உபரியை வழங்கும் தானியம் என்பதால், நெல்விளையும் நிலங்களிலும் முல்லை மற்றும் குறிஞ்சி நிலங்களிலும் பயிரிட முயற்சி எடுத்தனர். எனவே, பிரமதேயம் மற்றும் கோயில்கட்டி அதற்கான நிலங்களை உருவாக்க முனைந்தது. கொங்கு நாடு அதற்கு வசதியாக இருந்தது. இந்நிலத்தில் அமராவதி, நொய்யல், பவானி போன்ற ஆறுகளும், சண்முகநதி, பாலாறு, பெருந்தலாறு போன்ற சிறிய நதிகளும் ஓடிக்கொண்டிருந்தது. பல்வேறு கூட்டப்பெயர்களுடன் வேட்டுவர்களும், ஆயர்களும் இனக்குழுவாக வாழ்ந்து வந்தனர். வேட்டுவர்கள் வேட்டைத் தொழிலும், ஆயர்கள் கால்நடை வளர்ப்பும், தானியம் பயிரிடல் என்ற அளவில் பொருளாதார வாழ்வு இருந்தது. “ஆ கெழு கொங்கர்’’ “கொங்கர் ஆ பரந்தன்ன’’ என சங்க இலக்கியம் இவர்களைப் பதிவு செய்துள்ளது.       
                                                                                  கொங்கு தவிர்த்த இதரப்பகுதிகளில் வேளாண் தொழில் செய்வோரை, பாண்டிய வேளாளர், சோழிய வேளாளர் என அழைக்கப்பட்டு வந்தனர். இங்கு வேளாளர் என யாரும் இல்லை. எனவே, தஞ்சை தொண்டைமண்டலம் (புதுக்கோட்டை) ஆகிய பகுதிகளில் இருந்து வேளாளர்கள் கொங்கில் குடியேறினர் (நிக்கல்சன் 1887:86) இதையே, ”சோழன் பூர்வபட்டயம்’’, “அண்ணமார்கதை’’, “கொங்கு வேளாளர் புராணம்’’, ஆகியன உறுதிப்படுத்துகிறது. ((குறிப்பு : கொங்கு வெள்ளாளர்கள் பதின்மூன்றாம் நூற்றாண்டின் போதுதான் கொங்கு நிலத்திற்கு வருகிறார்கள் . ஆனால் பத்தாம் நூற்றாண்டிலேயே காமிண்டன் அல்லது கௌண்டர் என்னும் பட்டம் வன்னியர்கள் பெற்று அதை வழக்கத்திலும் கொண்டு வந்துவிட்டார்கள்))
குடியேறிய வேளாளர்கள் கொங்கிலுள்ள ஆயர்களுடன் ரத்தக்கலப்பு ஏற்பட்டு வேளாளர் என்ற புதியப் பெயரைத் தாங்கி நின்றனர். இவர்கள் குடியேறிய பின்பே, நீர்பாசனமுறை கொங்கு நாட்டில் உருவானது. குடியேறிய வேளாளர்கள் ஏற்கெனவே ஆயர்களிடம் உள்ள கூட்டம் (குலம்) முறையை ஏற்றுக்கொண்டனர். ஆயர்கள் அவர்களிடம் வேளாண் தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொண்டனர். இதன் பிறகே கல்வெட்டுகளில் வேளாளர் என்று பொறிக்கப்பட்டுள்ளது என அறிகிறோம். வேளாளர் என்ற சொல்லுக்கு வெள்ளத்தை ஆள்பவர் என்ற பொருள் உண்டு.                                                                                                                                              
  1. மருத நிலப்பகுதியில் இருந்த வேளாளர்கள் தமது சாதிப்பெயரை பிள்ளை என மாற்றிக்கொண்டது போல் கொங்கு வேளாளர்கள் தங்கள் பெயரை கவுண்டர் என மாற்றிக்கொண்டனர். இது தங்களை மேல்நிலையாக்கம் செய்வதற்கான நடவடிக்கையாகும்.                                                      ஆதாரம் : காலிங்கராயன் கால்வாய்  பற்றிய கட்டுரை (http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=303%3A2009-08-27-02-40-33&catid=911%3A09&Itemid=154)
  2.  கொங்கு வெள்ளாளர்கள் அண்மைய காலத்தில்தான் கவுண்டர் பட்டத்தை பயன்ப்படுத்தி வருகின்றனர் என்று கொங்கு வெள்ளாளர்
    சமூகத்தை சேர்ந்த முனைவர் .திரு .சு .ராஜவேலு அவர்கள் “தொல்லியல் சுடர்கள் ” என்ற நூலில் “கல்வெட்டுகளில் கொங்கு வெள்ளாளர் கூட்டுப் பெயர்கள் ” என்ற கட்டுரையில் (பக்கம் 176) கீழ்கண்டவாறு கூறியுள்ளார்.

“கூட்டுபெயர்கள் வரும் கல்வெட்டுகளில் கொங்கு என்ற இக்கால முன்னொட்டு காணப்படவில்லை . எனவே கொங்கு என்ற நிலவியல் சொல் பிற்காலத்தில் முன்னொட்டாக வந்துள்ளது என்பது தெளிவாக விளங்கும் . இதே போன்று கொங்கு வெள்ளாளக் கௌண்டர்களின் பின் ஒத்தான ‘கவுண்டர் ’ என்ற பட்டமும் ல்கல்வெட்டில் மிகக் குறைவாகவே காணப்படுகிறது என்று திரு .சு .ராஜவேலு அவர்கள் எழுதியுள்ளார் .                                                                                    

3.   ”1871 தொடங்கி 1931 வரை நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பில் இவர்கள் எதிலும் கொங்கு வெள்ளாளர் என்று கணக்கெடுக்க படவில்லை .. இதனை எட்கர் தர்ஸ்டன் என்பவர் "தென் இந்திய சாதியினர் மற்றும் பழங்குடியினர் " என்னும் புத்தகத்தில் கொங்க என்ற தலைப்பில் எழுதபெற்ற வசனம் இங்கே :            

KONGA-konga are kongu is a territorial term, meaning inhabitant of the territorial country.It is recent times of census, been returned as a division of a large number of classes mostly tamils which include – Ambattan, Kaiolan, Kammalan,Kuravan,Kusavan,Malayan,Odde,Parayan, upparaand vellala.It is used as a term of abuse among the Badagas of the Nilgiri hills. Yhose for example, who made mistakes in matching kolmgrens…were seornfully called konga by the onlookers.
    Similarly in parts of Tamil country a tall , lean and stupid individual is called a kongan.They seem to have little in     common with other vellalas,except the name, and appear to hold a lower position in society for reddis will not eat with them. They will dine with thotiyans and others of lower non bhramins castes.
Their devellings are generally Thatched huts.

4. இதனால்  அதுபோல இவர்கள் தனி சாதி என்ற அந்தஸ்து அடைய முடியாத நிலையே தொடர்ந்தது .. அப்போது வட தமிழகத்தில் வன்னியர்கள் கௌண்டர் என்ற பட்டதுடன் இருப்பதை கண்டு , அதை தங்கள் பெயருடன் சேர்த்து போட்டு தனி சாதியாக அடையாளம் பெற்றனர்   .  



INDIAN COMMUNITIES  என்ற புத்தகத்தில் கே.எஸ்.சிங் என்பவர் பின்வருமாறு எழுதியிருக்கிறார் .

“KONGU VELLALA/ KONGU VELLALA GOUNDER”
This is a community of tamilnadu who shares some common features with other vellala excepts the name.
They are distributed in Kongu nadu comprising the adjoining districts of tamilnadu and kerala.
IN TAMILNADU THEY ARE REFERRED TO AS KONGU VELLALAR, BUT AFFIX GOUNDAR AS S HONORIFIC TITLE BORROWED FROM THE PEOPLE OF THE NORTHERN DISTRICTS OF TAMILNADU.
In kerala, the kongu vellala goundar is called kongu vellala drive the name from their original place of habitants.

 ==========================================================

முடிவுரை :      
==========

கௌண்டர்  பட்டம்     

வன்னியர் குல க்ஷத்ரியர்:
  1. கல்வெட்டு படி பட்டம் கிடைத்த காலம் - பத்தாம் நூற்றாண்டு - சோழ மன்னரால் கொடுக்க பட்டது
  2. தமிழக சாதி பட்டியலில் அழைக்கப்படும் முறை - கௌண்டர்
  3. கௌண்டர் பட்டதுடன் அழைக்கப்படும் பகுதிகள் - தமிழ்நாடு முழுதும் கொங்கு நிலத்தையும் சேர்த்து கௌண்டர் பட்டம் கொண்டுள்ளனர்

கொங்கு வெள்ளாளர்
  1. கல்வெட்டு படி பட்டம் கிடைத்த காலம் -  13 ஆம் நூற்றாண்டில்தான்  வெள்ளாளர்கள் கொங்கு நிலத்திற்கு வருகின்றனர் .அதன் பின்தான் வெள்ளாளர்கள் கொங்கு வெள்ளாளர் என்றே மாற்றம் செய்தனர் . அதன் பிறகு வெள்ளைக்காரன் காலத்தில் நடந்த  சாதி வாரி கணக்கெடுப்பு வரை அந்த பட்டம் இல்லை .பின்பு மேல்நிலையாக்கம் செய்வதற்காக கௌண்டர் பட்டம் சேர்த்து கொண்டனர்
  2. தமிழக சாதி பட்டியலில் அழைக்கப்படும் முறை - கொங்கு வெள்ளாள கௌண்டர்
  3. கௌண்டர் பட்டதுடன் அழைக்கப்படும் பகுதிகள் - கொங்கு நிலம்


தமிழ்நாடு சாதி பட்டியலிலும் வெறும் கௌண்டர் என்பது வன்னியர்களை மட்டுமே குறிக்கிறது:                                                                 
  Vanniakula Kshatriya ( including Vanniyar, Vanniya, Vannia Gounder, Gounder or Kander, Padayachi, Palli and Agnikula Kshatriya )


ஆனால் கொங்கு வெள்ளலர்களுக்கோ கொங்கு வெள்ளாளர் என்றுதான் உள்ளதே தவிர, வெறும் கௌண்டர் என்று இல்லை . அதோடு ஏதாவது ஒரு பெயர் ஒட்டிதான் வருகிறது . அது அவர்களின் கூட்டத்தை குறிப்பது போல . வெறும் கௌண்டர் என்னும் பட்டம் வருவதில்லை

Kongu Vellalars( including Vellala Gounder, Nattu Gounder, Narambukkatti Gounder, Tirumudi Vellalar, Thondu Vellalar, Pala Gounder, Poosari, Gounder, Anuppa Vellala Gounder, Kurumba Gounder, Padaithalai Gounder, Chendalai Gounder, Pavalankatti Vellala Gounder, Pallavellala GounderSanku,Vellala Gounder,and Rathinagiri Gounder). 


காமிண்டன் அல்லது கௌண்டர் என்னும் பட்டம் பத்தாம் நூற்றாண்டிலேயே வன்னியர் குல க்ஷத்ரியர்க்கு கிடைத்துள்ளது . ஆனால் 13ஆம் நூற்றாண்டில்தான் வெள்ளாளர்கள் கொங்கு நாட்டுக்கு வந்து கொங்கு வெள்ளாளர் என்றே பெயரே பெற்றனர் .அதோடு அங்கு உள்ள ஆயர்களுடன் சேர்ந்து அவர்கள் உட்ப்பிரிவு பெயர்களையும் இவர்களும் சேர்த்து கொண்டனர் . இதனால் கௌண்டர் என்னும் பட்டம் இவர்கள் பயன் படுத்துவதற்கு பல நூற்றாண்டிற்கு முன்பிலுருந்தே வன்னியர் குல க்ஷத்ரியர் சாதியே பயன்ப்படுத்தி வருகிறது  என்பது தெளிவாகிறது . பள்ளி காமிண்டன் என்னும் பட்டம் போல கொங்கு வெள்ளாள காமிண்டன் என்ற பட்டம் எப்போது யாரால் தரப்பட்டது என்று தேடினால் கிடைக்கப்பெற்ற மாட்டாது . காரணம் அது பின்னாளில் கொங்கு வெள்ளாளர்கள் தங்களை மேல்நிலையாக்கம் செய்வதற்காக கௌண்டர் பட்டம் சேர்த்து கொண்ட நடவடிக்கையாகும்.

[நன்றி:: திரு.சியான் வசந்த் ]