Tuesday 30 April 2013

கௌண்டர் பட்டம் பற்றிய ஒரு ஆய்வு

கௌண்டர் பட்டம் பற்றிய ஒரு ஆய்வு:
காமிண்டன் என்ற சொல்லே  பிற்காலத்தில் கௌண்டர் என திரிந்தது என்பது அனைவரும் அறிந்தது . இன்று தமிழகத்தில் பல சாதிகள் இந்த பட்டம் கொண்டு அழைக்க படுகிறார்கள் . உதாரணமாக கொங்கு வெள்ளாளர்கள் “கொங்கு வெள்ளாள கௌண்டர்” என்று  (கோவை, நாமக்கல் ,ஈரோடு ) போன்ற இடங்களிலும், வன்னியர் குல க்ஷத்ரியர்   தமிழ்நாடு முழுதும் 
கொங்கு நிலத்தையும் சேர்த்து கௌண்டர் பட்டம் கொண்டுள்ளனர்

உண்மையில் இந்த பட்டம்  எந்த சாதி எந்த காலம் முதல் இந்த பட்டங்களை முறையே பெற்று உபயோகிக்கிறது என்பதை பற்றிய கட்டுரை இது .
பொதுவாக தலைமை பொறுப்பை நாயகர், படையாட்சி,  கௌண்டர், தேவர் என்ற பட்டங்கள்  கௌரவ ரீதியாகவும் ,தலைமை பொறுப்பை குறிப்பதாகவும் இடத்திர்க்கேர்ப்ப அழைக்கபடுகிறது. அதுபோல கொங்கு நிலத்தில் தலைமை பொறுப்பை  கௌண்டர் என்று அழைக்க படுகிறது .

இப்போது நமக்கு கிடைத்த கல்வெட்டு ஆதாரம் படி ,இவர்களுக்கு காமிண்டன் (கௌண்டர் ) பட்டம் வந்த காலத்தை பார்ப்போம் .
==================================================================

வன்னிய கௌண்டர் (அல்லது ) பள்ளி காமிண்டன் : 

((வன்னிய கௌண்டர்கள் பற்றிய செய்திகள் எனக்கு கிடைக்க வழி செய்த அண்ணல் கண்டர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.))
தமிழகத்தில் கிடைத்த கல்வெட்டு ஆதாரம் படி காமிண்டன்(கௌண்டர் ) என்னும் பட்டம் முதலில் பத்தாம்  நூற்றாண்டில்தான் கிடைத்திருக்கிறது . அதும் சோழ மன்னர்கள் வன்னியர்களுக்கு கொடுத்த பட்டமாக உள்ளது .

1. ஆயிரம் ஆண்டு ஏரி கல்வெட்டு : 
     தருமப்புரி பகுதியில் கிடைக்கும் நடுக்கற்களில் “காமிண்டன் ” என்ற சொல் பயின்று வர         காண்கிறோம் .

காமிண்டன் என்ற சொல் வன்னியர்கலையே குறிக்கிறது , இதற்க்கு             ஏராளமான கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன . இவற்றில் ஒரு கல்வெட்டு உலகத் தமிழாயிச்சி நிறுவனம் வெளியிட்ட “தமிழில் ஆவணங்கள் ” என்ற நூலில் முனைவர் .கொடுமுடி சண்முகன் அவர்கள் எழுதிய “ஏரிகளில் கள் ஆவணங்கள் “ என்ற கட்டுரையில் (பக்கம் 37) வெளியிடப்பட்டுள்ளது .
அதனை அப்படியே கீழே கொடுத்துள்ளோம் .


ஆயிரம் ஆண்டு ஏரி :
ஓமலூர் –தருமபுரி சாலையில் பூசாரிப்பட்டி அருகில் உள்ளது . தாச சமுத்திரம் எரி , பேரரசன் ராசராசனின் பதினொன்றாம் ஆட்சி ஆண்டில் இந்த எரி கட்டப்பட்டது . கி.பி .996 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த எரி தற்போது ஆயிரம் ஆண்டைக் கடந்து விட்டது .
ஏரியை அமைத்தவர் கச்சிப் பள்ளி காமிண்டன் (வன்னியர் ) பெங்கிலன் அமைந்தான் களி . அவனும் அவன் தம்பியும் கூட இருந்து வேலை செய்துள்ளனர் . இந்த ஏரியை அழியாமல் காப்பவர்களில் “கால் என் தலைமேல் ” என்கிறான் . இதற்க்கு அவர்களும் பாதம் பணிவேன் என்று பொருள்படும் .

“ஸ்வஸ்தி ஸ்ரீ
ராஜ ராஜ சோழ தேவற்கு
திருவேழுத்திட்டுச் செல்லா நின்ற
திருனல்லியாண்டு பதிநொற்றாவது
வடபூவாணிய நாட்டு
கச்சிப் பள்ளிக் காமிண்டந்
பொங்கிலந் அமன்தாந் களியும்
எந்தம்பி................ம்
இவ்விருவே மெங்கள் கைய்யால்
மணலொழிக்கி இவ்வேரி கட்டிநோம்
இந்த நம் அழிவு படாமற் காத்தாந்
காலெந் தலை மேலென “
என்று முனைவர் . கொடுமுடி சண்முகன் அவர்கள் தனது நூலில் குறித்துள்ளார் .
காமிண்டன் அதாவது கவுண்டன் என்ற பட்டப் பெயர் கொண்ட வன்னியர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முபே ஏரியை வெட்டி போது மக்களுக்கு நன்மை புரிந்துள்ளனர் .

2 .நடுக்கற்கள் :

காமிண்டன் என்ற பட்டப்பெயர் கொண்ட வன்னியரை பற்றி  இன்னொரு கல்வெட்டு , தருமபுரி மாவட்டம் குண்டூரப்பன் கொட்டாய் என்ற ஊரில்  உள்ள நடுகல் ஒன்றில் காணப்படுகிறது . கி.பி . 1045 ஆம் ஆண்டு பொறிக்கப்பட்ட இந்தக் கல்வெட்டில்

"பனை குளத்துப் பள்ளியில் பள்ளிகாரன் புளியக்காமுண்டன் மகன் வசவக்காமுண்டன்"

மகள் பெயர் அதில் காணப்படுகிறது .
தமிழ் நாடரசின் தொல்லியல் துரை வெளியிட்ட தருமபுரி மாவட்டக் கையேடு என்ற நூலில் (பக்கம் 176) இக்கல்வெட்டு செய்தி அதில் வெளியிடப் பட்டுள்ளது .

3.  கிருஷ்ணகிரி அருகே ஜகதாப் மேட்டூரில் காணப்பெறும் பலகைக் கல்லில்   உள்ள ஒரு               கல்வெட்டுச் செய்தியை ஆவணம் (இதழ்- 12 .ஜூலை 2001, பக்கம் 21), தொன்மைத் தடயம் (2003) ஆகிய நூல்கள் வெளியிட்டுள்ளன .
இக்கல்வெட்டு சோழ மன்னன் இரண்டாம் ராஜேந்திரனின் ஐந்தாம் ஆட்சியாண்டில் (கி.பி . 1059) வெட்டப்பட்டுள்ளது .

இதில்

“விஜயராஜேந்திர மண்டலத்துத் தகடூர் நாட்டுக்குக் கனக நாட்டுப் புள்ள மங்கலத்து அவனமச்சி பள்ளியான இவன் மகன் காமுண்டன் பாம்பு கடித்து செத்தான் . அது கண்டு அவனது மனவாட்டியும் , காமுண்டனின் தாயுமான விச்சக்கந் என்பாள் தீப்பாயிந்து உயிர் நீத்தாள் ”

என்ற செய்தி இடம் பெற்றுள்ளது . அவளது நினைவாக இந்த வீரக்கல் நடப்பட்டுள்ளது.

4. வன்னியர்களுக்கு நீண்ட நெடுங்காலமாக கவுண்டர் பட்டம் உண்டு என்பதார்க்கு மேலும் பல  ஆதாரங்கள் உள்ளன .

இது தொடர்பாக தமிழ்நாடரசின் தொல்லியல் துறையில் பணியாற்றும் கல்வெட்டாய்வாளர் முனைவர் , சொ .சாந்தலிங்கம் அவர்கள் “வரலாற்றில் தகடூர் ” என்ற நூலில் (பக்கம் 192-193) கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார் .
“கி.பி 11-13 ஆம் நூற்றாண்டளவில் பல இடங்களில் நாட்டுக் காமுண்டர்கலாகவும் , ஊர் முதலாளிகலாகவும் விளங்கியவர்கள் வன்னியர்களே .
இந்தப் பிரிவினரைப் பற்றிய குறிப்புக்கள் 11 ஆம் நூற்றாண்டு முதல் 18 ஆம் நூற்றாண்டு வரை தொடன்ர்து கிடைக்கின்றன . இவற்றில் இவர்கள் காமிண்டர் , காமுண்டர் , கவுண்டன் என திரிபு பெற்று வழங்கப்படுகின்றனர் . கி.பி. 15 ஆம் நூற்றாண்டிலேயே “கவுண்டர் ” எனத் தெளிவாக அழைக்கப்பட்டுள்ளனர் . இவர்களே பெரும்பான்மையும் நில உடைமையாலர்கலாகவும் வேளாண் தொழிலில் ஈடுப்பட்டவர்கலாகவும் இருக்கின்றனர் .”

கோவில் நிலக் கொடிகள் பற்றி இப்பகுதியில் கிடைக்கின்ற கல்வெட்டுகளில் 90 சதவிகிதம் பள்ளி கவுண்டர் கொடுத்தனவாகவே இருக்கின்றனர் .
ஒரு சான்று மட்டும் செட்டி இனத்தைச் சேர்ந்தவர் அளித்ததை கூறுகிறது என்று முனைவர் திரு .சொ .சாந்தலிங்கம் எழுதியுள்ளார்

5.செப்புப் பட்டயங்கள் :

வன்னியர்களுக்கு கவுண்டர் பட்டம் உண்டு எனபதற்கு செப்புப் பட்டய ஆதாரங்களும் இருக்கின்றன . கொங்கு வெள்ளாளர் சமூகத்தை சேர்ந்த புலவர் .செ .ராசு (மேனாள் பேராசிரியர், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் )அவர்கள் , கி.பி .1595 ஆம் ஆண்டைச் சேர்ந்த பண்ணாட்டார் எனப்படும் வன்னியர் செப்பு பட்டயத்தை படித்துள்ளார் .

இதனை “வன்னியர் ” என்ற நூலில் தொல்லியல்துறையின் முன்னாள் இயக்குனர் திரு.நடன காசிநாதன் அவர்கள் வெளியிட்டுள்ளார் .

அதில் பல கவுண்டர்களின் பெயர்கள் இடம் பெறுகின்றன .

“சென்னியார் கவுண்டர் ,சீராம கவுண்டர், செங்கழுநீர் கவுண்டர், வேடிச்சி கவுண்டர், நமனாண்டி கவுண்டர், நாரீசர் கவுண்டர், அம்பாயிர கவுண்டர் ” என நூற்றுக்கும் மேற்ப்பட்ட கவுண்டர்களின் பெயர்கள் எந்த செப்புப் பட்டயத்தில் காணப்படுகின்றன . 

6.  கி.பி 1633 ஆம் ஆண்டைச் சேர்ந்த நெய்வேலி வன்னியர் செப்பேட்டை திரு.நடன காசினாதன் அவர்கள் ‘கல்வெட்டு ’
காலாண்டிதழ் எண் 22 இல் பதிப்பித்துள்ளார் .அதில் அழகாபுரம் மெயபோகராய கவுண்டர் ,
சேலம் முதலிக் கவுண்டர் ,அனதாரிப்பட்டி அனதாரிக் கவுண்டர் ,, அயோத்தியாப் பட்டினம் தெய்வராயக் கவுண்டர் , ஒலைப்புடையார் காங்கய குருக்கவுண்டர் , கந்தப்பம்பட்டி கந்தப்ப கவுண்டர் , சீரகப்பாடி நல்லரிசாக் கவுண்டர் , சென்னகிரி ஒட்டைநாழி பாரிசாக்கவுண்டர் , வீரபாண்டி முந்திச் சின்னாக் கவுண்டர் , பாலம்பட்டி வடமலை கவுண்டர் ,மல்லூர் மாணிக்க கவுண்டர் , அண்ணாமலைப் பட்டி சேர்வை முத்தாக் கவுண்டர் , பொன்பரப்பி பெரிய குப்ப கவுண்டர் ,அம்மாபாளையம் ஆட்டையாம்பட்டி ராயகவுண்டர் ,வெங்காப்பட்டி குழந்தை
கவுண்டர் ,வாழைக் குட்டைப்பட்டி பத்திரிக் கவுண்டர் ,அம்புக்கட்டி பாளையம்குட்டையாக் கவுண்டர் போன்ற நூற்றுக்கும் மேற்ப்பட்ட வன்னிய கவுண்டர்களின் பெயர்கள் இப்பட்டயத்தில் இடம் பெற்றுள்ளன .
இவை அனைத்தும் நெய்வேலி வன்னியர் செப்பேடு சொல்லும் பள்ளி கவுண்டர்கள்

7. மேலும் ஆ.சிங்காரவேல் முதலியார் எழுதிய அபிதான சிந்தாமணியில் (பக்கம் 375 )

கவுண்டர் என்ற சொல்லுக்கு –“பள்ளிகளுக்கும், சில இடங்களில் வெள்ளாளர்களுக்கும் பட்டப் பெயரை இருக்கிறது ” என்று கூறப்பட்டுள்ளது .

8. வன்னிய கவுண்டரும் சித்தாண்டபுரம் செப்பேடும் :"சித்தாண்டபுரம் செப்பேடு"
வன்னிய கவுண்டர்களின் வீரத்தையும்,துணிவையும் இச்செப்பேடு உணர்த்துகிறது.இதில்  உள்ள சில சுவையான சில பகுதிகள் உங்கள் பார்வைக்கு.                                                                                                                                                      "சிறுதலை பூண்டியிலிருந்து ஒலகளந்த கவுண்டனும் யேகாம்பிறி கவண்டனும் ரண்டு பேரும் மேர்க்கே யேரி வறச்சே சிங்கிரி பட்டி கணவாயிலே நூரு வேடராகிறவர்கள் வந்து மறிச்சிக் கொண்டபோது ஒலகளந்தா கவுண்டனும் யேகாம்பிரி கவுண்டனும் இவர்கள் ரண்டு பேரும் அவர்கள் மேல் சண்டைகள் செய்து அவர்களில் நாலு பேரை வெட்டித் துறத்திவிட்டு அப்போ ஆலம்பாடி வந்து சேந்து அந்தக் கோட்டையில் வீட கட்டிக்கொண்டு நிலையாயிறுந்தார்கள்.அப்போ ஆலம்பாடி கோட்டையிலிறுக்கப்பட்ட யிறுப்பாளிநாயக்கன் நீங்களாரென்று கேட்டான் நாங்கள் படையாச்சிகளென்று சொன்னார்கள் ஆனால் நம்பள் பக்கத்திலெ யிறுங்கோளென்று சேத்திக்கொண்டான்

"மற்றொரு பகுதி:

"உலகளந்தா கவண்டனும் ஏகம்பிரி கவண்டனும் ஆலம்பாடி நாட்டையாண்டு
கொண்டிருக்கும் காலத்தில் பெரியப்ப நாயக்கன்,சின்னப்ப நாயக்கன்,பாலப்ப
நாய்க்கன் இவர்கள் வந்து என்களுக்கு வர்த்தனை உங்கள் வீட்டுக்கு ரண்டு பணம்குடுக்கவேண்டுமென்று கேட்டார்கள்.அதுக்கவர்கள் நாங்கள் குடுக்குறதில்லை யென்றார்கள்.நாங்கள் விடுகுறதில்லை என்றார்கள் இவர்கள்.ஆடு மாட்டை கொள்ளை ஓட்டினார்கள் அவர்களில் பத்து வேடரை வெட்டிக் கொள்ளையே திருப்பிக்கொண்டார்கள்.செகதேவராயரண்டை போனார்கள்.பாலப்ப நாயக்கன் எங்கள் வர்த்தனையைக் கேட்டோம்
என்று சொன்னான்.ஏகாம்பிரி கவுண்டன் நாங்கள் வன்னிய வம்ஷம் அப்படி
கொடோமென்றோம்.எங்கள் ஆடுமாடெல்லம் கொள்ளையிட்டார்கள் நாங்கள் அவர்களை பத்துப்பேரை வெட்டி கொள்ளையை திறுப்பிக்கொண்டோமென்றான்.செகதேவராயர் வேடர் கையில் 100 பொன் அபுறாதமாக வாங்கிக்கொண்டு நீங்கள் சவுரியவான்களென்று மெச்சி உங்களுக்கு கென்னா வெகுமானம் வேணுமென்றார் அப்போது ஏகாம்பிரி கவுண்டனெங்களுக்கின்ன சாதி அதிகாரம் வேணுமென்று
கேட்டார்கள்"

வன்னிய கவுண்டரும் சித்தாண்டபுரம் செப்பேடும் :
விளக்கம்:                                                                                                                         சிறுதலைப்பூண்டி என்ர இடத்திலிருந்து உலகளந்தா கவுண்டர், ஏகாம்பர கவுண்டர் என்ற வன்னியர் இருவர் மேற்கு நோக்கி செல்கையில் அவர்களை ஒரு கணவாயினருகே நூறு வேடர்கள் வழி மறிக்கின்றனர்.ஆனால் இவ்விருவரும் அவ்வேடரோடு போரிட்டு அவர்களில் நான்கு பேரைக் கொன்றனர்.இதனைக் கண்ட அந்த
வேடர் கூட்டம் சிதறி ஓடிவிட்டது.இதன் பிறகு இந்த வன்னிய கவுண்டர் இருவரும் ஆலம்பாடி எனும் ஊரில் குடியமர்ந்தனர். ஆலம்பாடி பகுதியை அப்போது ஆட்சி செய்த (தெலுங்கு) இறுப்பாளி நாயக்கன் என்பவன் இவர்களை பற்றிக் கேள்விப்பட்டு இவர்களிடம் யாரென்று கேட்டபோது தாங்கள் படையாட்சிகள் என்று அந்த இரு வன்னியரும் கூறினர்.நீங்கள் எங்களுக்கு உறுதுணையாயிருங்கள் என்று அவர்களை இறுப்பாளீ நாய்க்கன் சேர்த்துக்கொண்டான்.ஆலம்பாடி நாட்டில் உலகளந்தா கவுண்டன்,ஏகாம்பர கவுண்டன் இருவரும் தலைவர்கள் என்ற நிலையில் வலுவுடன் இருந்தபோது (தெலுங்கு) நாயக்கராட்சியின் பிரதிநிதிகளான பெரியப்ப,சின்னப்ப,பாலப்ப நாய்க்கன்கள் இவர்களிடம் வரி கேட்டனர்.கொடுக்கமாட்டோம் என்று மறுத்தனர் வன்னியர்கள். வரி கொடுக்க மறுத்ததால் நாய்க்கர் தமது ஆட்களுடன் வன்னியருடைய ஆடு.மாடுகளை ஓட்டிச் செல்லத் தொடங்கினர்.சினமுற்ற வன்னியர் நாய்க்கர் ஆட்களோடு போர் செய்து அவர்களில் பத்து பேரை வெட்டிக்கொன்று தமது ஆடு மாடுகளை மீட்டுக்கொண்டனர்.இரு தரப்பினரும் பெருமன்னனான செகதேவராயரிடம் சென்று முறையிட்டனர்.பாலப்ப நாய்க்கர் தரப்பினர் இவர்கள் வரி கொடுக்கவில்லை என்றனர்.ஏகாம்பர கவுண்டர் நாங்கள் வன்னியர் குலம் என்பதால் வரி கொடுக்க மறுத்தோம்.எங்கள் ஆடு,மாடுகளை கவர்ந்து செல்ல முயன்றதால் அவர்கள் ஆட்கள் பத்து பேரை வெட்டிக்கொன்றோம் என்றனர்.வழக்கை விசாரித்த செகதேவராயர் பாலப்ப நாய்க்கர் தரப்பிற்கு நூறு பொன் அபராதம் விதித்து பின்னர் ஏகாம்பர கவுண்டர் தரப்பை பாராட்டி உங்களுக்கு என்ன சன்மானம் வேண்டும் என்று வினவ அதற்கு அவர்கள் எங்களுக்கு எங்கள் இன ஜாதி தலைமைப் பொறுப்பு வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். இந்த செப்பேட்டில் ஏகாம்பர கவுண்டர் உள்ளிட்ட பல வன்னிய கவுண்டர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.மேலும் அதில் உள்ள மற்றொரு முக்கிய
செய்தி: ஒரு தேரோட்டத்தின்போது வன்னியர் தங்கள் விருதுகளைப் பயன்படுத்தக்கூடாது என்று வலங்கை ஜாதிகளைச் சேர்ந்தோர் மறித்து பிரச்சினை செய்ய வன்னிய கவுண்டர்கள் தம்மைத் தடுத்த வலங்கை ஜாதியாரை அடித்து துரத்தி தேரோட்டத்தை நடத்தினர்.
ஆக  வன்னியர்களுக்கு பத்தாம் நூற்றாண்டு முதலே கௌண்டர் என்னும் பட்டம் உண்டு என்பதற்கான ஆதாரங்கள் எண்ணற்றவை  . அடுத்து கொங்கு வெள்ளாளர்களை பார்ப்போம்                                                                                                                                                           
========================================================

கொங்கு வெள்ளாளர்கள் :                                                                                                              முல்லை நிலமாதலால், காடும், காடும் சார்ந்த நிலங்களாக கொங்கு காட்சியளித்தது. இங்கு வாழ்ந்த இனக் குழுக்கள், வேடர், ஆயர் மற்றும் எயினர் ஆகும். வேடர்கள் வேட்டைத் தொழிலையும் ஆயர்கள் கால் நடைவளர்த்தல், தினை, வரகு, அவரை, துவரை முதலிய பயிர்களை பயிரிடல் (விண்ணோக்கிய வேளாண்முறை) என்ற முறையில் பொருளாதார வாழ்க்கை இருந்தது. இவர்களுக்குள் கூட்டப்பிரிவுகள் இருந்தன. தாம் வாழும் முறை மற்றும் இடங்களுக்கேற்ப கூட்டப்பெயர்கள் நிலைத்து இருந்தன. திருமணத்திற்கான ஒழுக்க முறை கூட்டங்களிடையே வரையறை செய்யப்பட்டிருந்தது. தமிழகம் முழுவதும் மருத நிலப்பகுதிகளில் இனக்குழு சிதைவடைந்த நிலையில், கொங்கில் மட்டும் சிதையாமல் 12ஆம் நூற்றாண்டு வரையில் நீடித்தது. அது மட்டுமல்ல புறம்போக்கு நிலங்கள் ஏராளமாகவும் இருந்தன.      
                                                       13ஆம் நூற்றாண்டில் சோழ, பாண்டிய அரசுகளின் பொருளாதார தேவை கூடியது. நெல் அதிக உபரியை வழங்கும் தானியம் என்பதால், நெல்விளையும் நிலங்களிலும் முல்லை மற்றும் குறிஞ்சி நிலங்களிலும் பயிரிட முயற்சி எடுத்தனர். எனவே, பிரமதேயம் மற்றும் கோயில்கட்டி அதற்கான நிலங்களை உருவாக்க முனைந்தது. கொங்கு நாடு அதற்கு வசதியாக இருந்தது. இந்நிலத்தில் அமராவதி, நொய்யல், பவானி போன்ற ஆறுகளும், சண்முகநதி, பாலாறு, பெருந்தலாறு போன்ற சிறிய நதிகளும் ஓடிக்கொண்டிருந்தது. பல்வேறு கூட்டப்பெயர்களுடன் வேட்டுவர்களும், ஆயர்களும் இனக்குழுவாக வாழ்ந்து வந்தனர். வேட்டுவர்கள் வேட்டைத் தொழிலும், ஆயர்கள் கால்நடை வளர்ப்பும், தானியம் பயிரிடல் என்ற அளவில் பொருளாதார வாழ்வு இருந்தது. “ஆ கெழு கொங்கர்’’ “கொங்கர் ஆ பரந்தன்ன’’ என சங்க இலக்கியம் இவர்களைப் பதிவு செய்துள்ளது.       
                                                                                  கொங்கு தவிர்த்த இதரப்பகுதிகளில் வேளாண் தொழில் செய்வோரை, பாண்டிய வேளாளர், சோழிய வேளாளர் என அழைக்கப்பட்டு வந்தனர். இங்கு வேளாளர் என யாரும் இல்லை. எனவே, தஞ்சை தொண்டைமண்டலம் (புதுக்கோட்டை) ஆகிய பகுதிகளில் இருந்து வேளாளர்கள் கொங்கில் குடியேறினர் (நிக்கல்சன் 1887:86) இதையே, ”சோழன் பூர்வபட்டயம்’’, “அண்ணமார்கதை’’, “கொங்கு வேளாளர் புராணம்’’, ஆகியன உறுதிப்படுத்துகிறது. ((குறிப்பு : கொங்கு வெள்ளாளர்கள் பதின்மூன்றாம் நூற்றாண்டின் போதுதான் கொங்கு நிலத்திற்கு வருகிறார்கள் . ஆனால் பத்தாம் நூற்றாண்டிலேயே காமிண்டன் அல்லது கௌண்டர் என்னும் பட்டம் வன்னியர்கள் பெற்று அதை வழக்கத்திலும் கொண்டு வந்துவிட்டார்கள்))
குடியேறிய வேளாளர்கள் கொங்கிலுள்ள ஆயர்களுடன் ரத்தக்கலப்பு ஏற்பட்டு வேளாளர் என்ற புதியப் பெயரைத் தாங்கி நின்றனர். இவர்கள் குடியேறிய பின்பே, நீர்பாசனமுறை கொங்கு நாட்டில் உருவானது. குடியேறிய வேளாளர்கள் ஏற்கெனவே ஆயர்களிடம் உள்ள கூட்டம் (குலம்) முறையை ஏற்றுக்கொண்டனர். ஆயர்கள் அவர்களிடம் வேளாண் தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொண்டனர். இதன் பிறகே கல்வெட்டுகளில் வேளாளர் என்று பொறிக்கப்பட்டுள்ளது என அறிகிறோம். வேளாளர் என்ற சொல்லுக்கு வெள்ளத்தை ஆள்பவர் என்ற பொருள் உண்டு.                                                                                                                                              
  1. மருத நிலப்பகுதியில் இருந்த வேளாளர்கள் தமது சாதிப்பெயரை பிள்ளை என மாற்றிக்கொண்டது போல் கொங்கு வேளாளர்கள் தங்கள் பெயரை கவுண்டர் என மாற்றிக்கொண்டனர். இது தங்களை மேல்நிலையாக்கம் செய்வதற்கான நடவடிக்கையாகும்.                                                      ஆதாரம் : காலிங்கராயன் கால்வாய்  பற்றிய கட்டுரை (http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=303%3A2009-08-27-02-40-33&catid=911%3A09&Itemid=154)
  2.  கொங்கு வெள்ளாளர்கள் அண்மைய காலத்தில்தான் கவுண்டர் பட்டத்தை பயன்ப்படுத்தி வருகின்றனர் என்று கொங்கு வெள்ளாளர்
    சமூகத்தை சேர்ந்த முனைவர் .திரு .சு .ராஜவேலு அவர்கள் “தொல்லியல் சுடர்கள் ” என்ற நூலில் “கல்வெட்டுகளில் கொங்கு வெள்ளாளர் கூட்டுப் பெயர்கள் ” என்ற கட்டுரையில் (பக்கம் 176) கீழ்கண்டவாறு கூறியுள்ளார்.

“கூட்டுபெயர்கள் வரும் கல்வெட்டுகளில் கொங்கு என்ற இக்கால முன்னொட்டு காணப்படவில்லை . எனவே கொங்கு என்ற நிலவியல் சொல் பிற்காலத்தில் முன்னொட்டாக வந்துள்ளது என்பது தெளிவாக விளங்கும் . இதே போன்று கொங்கு வெள்ளாளக் கௌண்டர்களின் பின் ஒத்தான ‘கவுண்டர் ’ என்ற பட்டமும் ல்கல்வெட்டில் மிகக் குறைவாகவே காணப்படுகிறது என்று திரு .சு .ராஜவேலு அவர்கள் எழுதியுள்ளார் .                                                                                    

3.   ”1871 தொடங்கி 1931 வரை நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பில் இவர்கள் எதிலும் கொங்கு வெள்ளாளர் என்று கணக்கெடுக்க படவில்லை .. இதனை எட்கர் தர்ஸ்டன் என்பவர் "தென் இந்திய சாதியினர் மற்றும் பழங்குடியினர் " என்னும் புத்தகத்தில் கொங்க என்ற தலைப்பில் எழுதபெற்ற வசனம் இங்கே :            

KONGA-konga are kongu is a territorial term, meaning inhabitant of the territorial country.It is recent times of census, been returned as a division of a large number of classes mostly tamils which include – Ambattan, Kaiolan, Kammalan,Kuravan,Kusavan,Malayan,Odde,Parayan, upparaand vellala.It is used as a term of abuse among the Badagas of the Nilgiri hills. Yhose for example, who made mistakes in matching kolmgrens…were seornfully called konga by the onlookers.
    Similarly in parts of Tamil country a tall , lean and stupid individual is called a kongan.They seem to have little in     common with other vellalas,except the name, and appear to hold a lower position in society for reddis will not eat with them. They will dine with thotiyans and others of lower non bhramins castes.
Their devellings are generally Thatched huts.

4. இதனால்  அதுபோல இவர்கள் தனி சாதி என்ற அந்தஸ்து அடைய முடியாத நிலையே தொடர்ந்தது .. அப்போது வட தமிழகத்தில் வன்னியர்கள் கௌண்டர் என்ற பட்டதுடன் இருப்பதை கண்டு , அதை தங்கள் பெயருடன் சேர்த்து போட்டு தனி சாதியாக அடையாளம் பெற்றனர்   .  



INDIAN COMMUNITIES  என்ற புத்தகத்தில் கே.எஸ்.சிங் என்பவர் பின்வருமாறு எழுதியிருக்கிறார் .

“KONGU VELLALA/ KONGU VELLALA GOUNDER”
This is a community of tamilnadu who shares some common features with other vellala excepts the name.
They are distributed in Kongu nadu comprising the adjoining districts of tamilnadu and kerala.
IN TAMILNADU THEY ARE REFERRED TO AS KONGU VELLALAR, BUT AFFIX GOUNDAR AS S HONORIFIC TITLE BORROWED FROM THE PEOPLE OF THE NORTHERN DISTRICTS OF TAMILNADU.
In kerala, the kongu vellala goundar is called kongu vellala drive the name from their original place of habitants.

 ==========================================================

முடிவுரை :      
==========

கௌண்டர்  பட்டம்     

வன்னியர் குல க்ஷத்ரியர்:
  1. கல்வெட்டு படி பட்டம் கிடைத்த காலம் - பத்தாம் நூற்றாண்டு - சோழ மன்னரால் கொடுக்க பட்டது
  2. தமிழக சாதி பட்டியலில் அழைக்கப்படும் முறை - கௌண்டர்
  3. கௌண்டர் பட்டதுடன் அழைக்கப்படும் பகுதிகள் - தமிழ்நாடு முழுதும் கொங்கு நிலத்தையும் சேர்த்து கௌண்டர் பட்டம் கொண்டுள்ளனர்

கொங்கு வெள்ளாளர்
  1. கல்வெட்டு படி பட்டம் கிடைத்த காலம் -  13 ஆம் நூற்றாண்டில்தான்  வெள்ளாளர்கள் கொங்கு நிலத்திற்கு வருகின்றனர் .அதன் பின்தான் வெள்ளாளர்கள் கொங்கு வெள்ளாளர் என்றே மாற்றம் செய்தனர் . அதன் பிறகு வெள்ளைக்காரன் காலத்தில் நடந்த  சாதி வாரி கணக்கெடுப்பு வரை அந்த பட்டம் இல்லை .பின்பு மேல்நிலையாக்கம் செய்வதற்காக கௌண்டர் பட்டம் சேர்த்து கொண்டனர்
  2. தமிழக சாதி பட்டியலில் அழைக்கப்படும் முறை - கொங்கு வெள்ளாள கௌண்டர்
  3. கௌண்டர் பட்டதுடன் அழைக்கப்படும் பகுதிகள் - கொங்கு நிலம்


தமிழ்நாடு சாதி பட்டியலிலும் வெறும் கௌண்டர் என்பது வன்னியர்களை மட்டுமே குறிக்கிறது:                                                                 
  Vanniakula Kshatriya ( including Vanniyar, Vanniya, Vannia Gounder, Gounder or Kander, Padayachi, Palli and Agnikula Kshatriya )


ஆனால் கொங்கு வெள்ளலர்களுக்கோ கொங்கு வெள்ளாளர் என்றுதான் உள்ளதே தவிர, வெறும் கௌண்டர் என்று இல்லை . அதோடு ஏதாவது ஒரு பெயர் ஒட்டிதான் வருகிறது . அது அவர்களின் கூட்டத்தை குறிப்பது போல . வெறும் கௌண்டர் என்னும் பட்டம் வருவதில்லை

Kongu Vellalars( including Vellala Gounder, Nattu Gounder, Narambukkatti Gounder, Tirumudi Vellalar, Thondu Vellalar, Pala Gounder, Poosari, Gounder, Anuppa Vellala Gounder, Kurumba Gounder, Padaithalai Gounder, Chendalai Gounder, Pavalankatti Vellala Gounder, Pallavellala GounderSanku,Vellala Gounder,and Rathinagiri Gounder). 


காமிண்டன் அல்லது கௌண்டர் என்னும் பட்டம் பத்தாம் நூற்றாண்டிலேயே வன்னியர் குல க்ஷத்ரியர்க்கு கிடைத்துள்ளது . ஆனால் 13ஆம் நூற்றாண்டில்தான் வெள்ளாளர்கள் கொங்கு நாட்டுக்கு வந்து கொங்கு வெள்ளாளர் என்றே பெயரே பெற்றனர் .அதோடு அங்கு உள்ள ஆயர்களுடன் சேர்ந்து அவர்கள் உட்ப்பிரிவு பெயர்களையும் இவர்களும் சேர்த்து கொண்டனர் . இதனால் கௌண்டர் என்னும் பட்டம் இவர்கள் பயன் படுத்துவதற்கு பல நூற்றாண்டிற்கு முன்பிலுருந்தே வன்னியர் குல க்ஷத்ரியர் சாதியே பயன்ப்படுத்தி வருகிறது  என்பது தெளிவாகிறது . பள்ளி காமிண்டன் என்னும் பட்டம் போல கொங்கு வெள்ளாள காமிண்டன் என்ற பட்டம் எப்போது யாரால் தரப்பட்டது என்று தேடினால் கிடைக்கப்பெற்ற மாட்டாது . காரணம் அது பின்னாளில் கொங்கு வெள்ளாளர்கள் தங்களை மேல்நிலையாக்கம் செய்வதற்காக கௌண்டர் பட்டம் சேர்த்து கொண்ட நடவடிக்கையாகும்.

[நன்றி:: திரு.சியான் வசந்த் ]

1 comment:

  1. Mr, Bullshit, please go and ask to any of your scholar about the authenticity. My self only given all those valid inscription references to my friend annal. You don't have knowledge in differentiating village name with caste name. Kindly see below :

    வடபூவாணிய நாட்டு
    கச்சிப் பள்ளிக் காமிண்டந்

    It clearly shows that, he hails from "Palli community" (Vanniyar). You are saying "Sellan Koottam of Kongu Vellala Goundar" (Kongu Region - Vellala Goundar). You must prove this,

    You also to know about who are the "Real Kongu Region - Vellala Goundar"
    of 13th and 14th century A.D ?

    In Thirupur (Kangeyam, Pattali) "Kongu Cholas Inscriptions" (1293 A.D), "Jayamkonda Velan Magan Paraiyan" is mentioned. The individual donated two lamps for the Pattali Palvenisvaramudaiyar temple.

    In Coimbatore (Mettupalayam, Velliankadu) "Kongu Cholas Inscriptions" (13th Century A.D), "Vellalan Cheyyaril Paraiyan Thenna Kon" is mentioned.

    In Coimbatore "Kongu Cholas Inscriptions" (1292 A.D), "Vellalan Pulligalil Paraiyan Paraiyanana Nattu Kamindan" is mentioned. The individual donated a lamp to Kovanputhur Sangisvaramudaiyar temple.

    In Coimbatore "Kongu Pandiyar Inscriptions" (14th century A.D), "Vellalan Paiyaril Paraiyan Paraiyanen" is mentioned. The individual donated a lamp to Idikarai Villisvaraudaiyar temple.

    In the same temple and same period the another individual named "Vellalan Paiyaril Sadaiyan Neriyan Parayanen" donated a lamp to the temple.

    In Coimbatore (Udumalaipettai, Kadathur) "Kongu Cholas Inscriptions" (1217 A.D), "Vellalan Kallan Paraiyan" is mentioned. The individual donated a gift.

    In view of the above authentic evidence, who are the real "Koungu Region Vellalar" ?

    According to inscriptions evidence, the answer is the "Great Paraiyar community", since they are called as "Vellalan Paraiyan", "Velan Paraiyan". "Vellalan Kallan Paraiyan", "Paraiyan Kamindan" (In inscriptions "Kamindan" means present "Kounder").

    If any one claims "Vellala Gounder" in the "Kongu Region", they will be kept at par with "Kongu Vellala Paraiyar", "Kongu Vellala Paraiyar Gounder". Since the inscriptions of 13th to 14th century A.D, during the period of "Kongu Cholas" and "Kongu Pandiyas", certified the "Great Paraiyar" community as "Vellala Paraiyar Gounder" in the "Kongu Region". Hence, they are also "Kongu Vellala Gounder".


    ReplyDelete