Tuesday, 30 April 2013

கௌண்டர் பட்டம் பற்றிய ஒரு ஆய்வு

கௌண்டர் பட்டம் பற்றிய ஒரு ஆய்வு:
காமிண்டன் என்ற சொல்லே  பிற்காலத்தில் கௌண்டர் என திரிந்தது என்பது அனைவரும் அறிந்தது . இன்று தமிழகத்தில் பல சாதிகள் இந்த பட்டம் கொண்டு அழைக்க படுகிறார்கள் . உதாரணமாக கொங்கு வெள்ளாளர்கள் “கொங்கு வெள்ளாள கௌண்டர்” என்று  (கோவை, நாமக்கல் ,ஈரோடு ) போன்ற இடங்களிலும், வன்னியர் குல க்ஷத்ரியர்   தமிழ்நாடு முழுதும் 
கொங்கு நிலத்தையும் சேர்த்து கௌண்டர் பட்டம் கொண்டுள்ளனர்

உண்மையில் இந்த பட்டம்  எந்த சாதி எந்த காலம் முதல் இந்த பட்டங்களை முறையே பெற்று உபயோகிக்கிறது என்பதை பற்றிய கட்டுரை இது .
பொதுவாக தலைமை பொறுப்பை நாயகர், படையாட்சி,  கௌண்டர், தேவர் என்ற பட்டங்கள்  கௌரவ ரீதியாகவும் ,தலைமை பொறுப்பை குறிப்பதாகவும் இடத்திர்க்கேர்ப்ப அழைக்கபடுகிறது. அதுபோல கொங்கு நிலத்தில் தலைமை பொறுப்பை  கௌண்டர் என்று அழைக்க படுகிறது .

இப்போது நமக்கு கிடைத்த கல்வெட்டு ஆதாரம் படி ,இவர்களுக்கு காமிண்டன் (கௌண்டர் ) பட்டம் வந்த காலத்தை பார்ப்போம் .
==================================================================

வன்னிய கௌண்டர் (அல்லது ) பள்ளி காமிண்டன் : 

((வன்னிய கௌண்டர்கள் பற்றிய செய்திகள் எனக்கு கிடைக்க வழி செய்த அண்ணல் கண்டர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.))
தமிழகத்தில் கிடைத்த கல்வெட்டு ஆதாரம் படி காமிண்டன்(கௌண்டர் ) என்னும் பட்டம் முதலில் பத்தாம்  நூற்றாண்டில்தான் கிடைத்திருக்கிறது . அதும் சோழ மன்னர்கள் வன்னியர்களுக்கு கொடுத்த பட்டமாக உள்ளது .

1. ஆயிரம் ஆண்டு ஏரி கல்வெட்டு : 
     தருமப்புரி பகுதியில் கிடைக்கும் நடுக்கற்களில் “காமிண்டன் ” என்ற சொல் பயின்று வர         காண்கிறோம் .

காமிண்டன் என்ற சொல் வன்னியர்கலையே குறிக்கிறது , இதற்க்கு             ஏராளமான கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன . இவற்றில் ஒரு கல்வெட்டு உலகத் தமிழாயிச்சி நிறுவனம் வெளியிட்ட “தமிழில் ஆவணங்கள் ” என்ற நூலில் முனைவர் .கொடுமுடி சண்முகன் அவர்கள் எழுதிய “ஏரிகளில் கள் ஆவணங்கள் “ என்ற கட்டுரையில் (பக்கம் 37) வெளியிடப்பட்டுள்ளது .
அதனை அப்படியே கீழே கொடுத்துள்ளோம் .


ஆயிரம் ஆண்டு ஏரி :
ஓமலூர் –தருமபுரி சாலையில் பூசாரிப்பட்டி அருகில் உள்ளது . தாச சமுத்திரம் எரி , பேரரசன் ராசராசனின் பதினொன்றாம் ஆட்சி ஆண்டில் இந்த எரி கட்டப்பட்டது . கி.பி .996 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த எரி தற்போது ஆயிரம் ஆண்டைக் கடந்து விட்டது .
ஏரியை அமைத்தவர் கச்சிப் பள்ளி காமிண்டன் (வன்னியர் ) பெங்கிலன் அமைந்தான் களி . அவனும் அவன் தம்பியும் கூட இருந்து வேலை செய்துள்ளனர் . இந்த ஏரியை அழியாமல் காப்பவர்களில் “கால் என் தலைமேல் ” என்கிறான் . இதற்க்கு அவர்களும் பாதம் பணிவேன் என்று பொருள்படும் .

“ஸ்வஸ்தி ஸ்ரீ
ராஜ ராஜ சோழ தேவற்கு
திருவேழுத்திட்டுச் செல்லா நின்ற
திருனல்லியாண்டு பதிநொற்றாவது
வடபூவாணிய நாட்டு
கச்சிப் பள்ளிக் காமிண்டந்
பொங்கிலந் அமன்தாந் களியும்
எந்தம்பி................ம்
இவ்விருவே மெங்கள் கைய்யால்
மணலொழிக்கி இவ்வேரி கட்டிநோம்
இந்த நம் அழிவு படாமற் காத்தாந்
காலெந் தலை மேலென “
என்று முனைவர் . கொடுமுடி சண்முகன் அவர்கள் தனது நூலில் குறித்துள்ளார் .
காமிண்டன் அதாவது கவுண்டன் என்ற பட்டப் பெயர் கொண்ட வன்னியர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முபே ஏரியை வெட்டி போது மக்களுக்கு நன்மை புரிந்துள்ளனர் .

2 .நடுக்கற்கள் :

காமிண்டன் என்ற பட்டப்பெயர் கொண்ட வன்னியரை பற்றி  இன்னொரு கல்வெட்டு , தருமபுரி மாவட்டம் குண்டூரப்பன் கொட்டாய் என்ற ஊரில்  உள்ள நடுகல் ஒன்றில் காணப்படுகிறது . கி.பி . 1045 ஆம் ஆண்டு பொறிக்கப்பட்ட இந்தக் கல்வெட்டில்

"பனை குளத்துப் பள்ளியில் பள்ளிகாரன் புளியக்காமுண்டன் மகன் வசவக்காமுண்டன்"

மகள் பெயர் அதில் காணப்படுகிறது .
தமிழ் நாடரசின் தொல்லியல் துரை வெளியிட்ட தருமபுரி மாவட்டக் கையேடு என்ற நூலில் (பக்கம் 176) இக்கல்வெட்டு செய்தி அதில் வெளியிடப் பட்டுள்ளது .

3.  கிருஷ்ணகிரி அருகே ஜகதாப் மேட்டூரில் காணப்பெறும் பலகைக் கல்லில்   உள்ள ஒரு               கல்வெட்டுச் செய்தியை ஆவணம் (இதழ்- 12 .ஜூலை 2001, பக்கம் 21), தொன்மைத் தடயம் (2003) ஆகிய நூல்கள் வெளியிட்டுள்ளன .
இக்கல்வெட்டு சோழ மன்னன் இரண்டாம் ராஜேந்திரனின் ஐந்தாம் ஆட்சியாண்டில் (கி.பி . 1059) வெட்டப்பட்டுள்ளது .

இதில்

“விஜயராஜேந்திர மண்டலத்துத் தகடூர் நாட்டுக்குக் கனக நாட்டுப் புள்ள மங்கலத்து அவனமச்சி பள்ளியான இவன் மகன் காமுண்டன் பாம்பு கடித்து செத்தான் . அது கண்டு அவனது மனவாட்டியும் , காமுண்டனின் தாயுமான விச்சக்கந் என்பாள் தீப்பாயிந்து உயிர் நீத்தாள் ”

என்ற செய்தி இடம் பெற்றுள்ளது . அவளது நினைவாக இந்த வீரக்கல் நடப்பட்டுள்ளது.

4. வன்னியர்களுக்கு நீண்ட நெடுங்காலமாக கவுண்டர் பட்டம் உண்டு என்பதார்க்கு மேலும் பல  ஆதாரங்கள் உள்ளன .

இது தொடர்பாக தமிழ்நாடரசின் தொல்லியல் துறையில் பணியாற்றும் கல்வெட்டாய்வாளர் முனைவர் , சொ .சாந்தலிங்கம் அவர்கள் “வரலாற்றில் தகடூர் ” என்ற நூலில் (பக்கம் 192-193) கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார் .
“கி.பி 11-13 ஆம் நூற்றாண்டளவில் பல இடங்களில் நாட்டுக் காமுண்டர்கலாகவும் , ஊர் முதலாளிகலாகவும் விளங்கியவர்கள் வன்னியர்களே .
இந்தப் பிரிவினரைப் பற்றிய குறிப்புக்கள் 11 ஆம் நூற்றாண்டு முதல் 18 ஆம் நூற்றாண்டு வரை தொடன்ர்து கிடைக்கின்றன . இவற்றில் இவர்கள் காமிண்டர் , காமுண்டர் , கவுண்டன் என திரிபு பெற்று வழங்கப்படுகின்றனர் . கி.பி. 15 ஆம் நூற்றாண்டிலேயே “கவுண்டர் ” எனத் தெளிவாக அழைக்கப்பட்டுள்ளனர் . இவர்களே பெரும்பான்மையும் நில உடைமையாலர்கலாகவும் வேளாண் தொழிலில் ஈடுப்பட்டவர்கலாகவும் இருக்கின்றனர் .”

கோவில் நிலக் கொடிகள் பற்றி இப்பகுதியில் கிடைக்கின்ற கல்வெட்டுகளில் 90 சதவிகிதம் பள்ளி கவுண்டர் கொடுத்தனவாகவே இருக்கின்றனர் .
ஒரு சான்று மட்டும் செட்டி இனத்தைச் சேர்ந்தவர் அளித்ததை கூறுகிறது என்று முனைவர் திரு .சொ .சாந்தலிங்கம் எழுதியுள்ளார்

5.செப்புப் பட்டயங்கள் :

வன்னியர்களுக்கு கவுண்டர் பட்டம் உண்டு எனபதற்கு செப்புப் பட்டய ஆதாரங்களும் இருக்கின்றன . கொங்கு வெள்ளாளர் சமூகத்தை சேர்ந்த புலவர் .செ .ராசு (மேனாள் பேராசிரியர், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் )அவர்கள் , கி.பி .1595 ஆம் ஆண்டைச் சேர்ந்த பண்ணாட்டார் எனப்படும் வன்னியர் செப்பு பட்டயத்தை படித்துள்ளார் .

இதனை “வன்னியர் ” என்ற நூலில் தொல்லியல்துறையின் முன்னாள் இயக்குனர் திரு.நடன காசிநாதன் அவர்கள் வெளியிட்டுள்ளார் .

அதில் பல கவுண்டர்களின் பெயர்கள் இடம் பெறுகின்றன .

“சென்னியார் கவுண்டர் ,சீராம கவுண்டர், செங்கழுநீர் கவுண்டர், வேடிச்சி கவுண்டர், நமனாண்டி கவுண்டர், நாரீசர் கவுண்டர், அம்பாயிர கவுண்டர் ” என நூற்றுக்கும் மேற்ப்பட்ட கவுண்டர்களின் பெயர்கள் எந்த செப்புப் பட்டயத்தில் காணப்படுகின்றன . 

6.  கி.பி 1633 ஆம் ஆண்டைச் சேர்ந்த நெய்வேலி வன்னியர் செப்பேட்டை திரு.நடன காசினாதன் அவர்கள் ‘கல்வெட்டு ’
காலாண்டிதழ் எண் 22 இல் பதிப்பித்துள்ளார் .அதில் அழகாபுரம் மெயபோகராய கவுண்டர் ,
சேலம் முதலிக் கவுண்டர் ,அனதாரிப்பட்டி அனதாரிக் கவுண்டர் ,, அயோத்தியாப் பட்டினம் தெய்வராயக் கவுண்டர் , ஒலைப்புடையார் காங்கய குருக்கவுண்டர் , கந்தப்பம்பட்டி கந்தப்ப கவுண்டர் , சீரகப்பாடி நல்லரிசாக் கவுண்டர் , சென்னகிரி ஒட்டைநாழி பாரிசாக்கவுண்டர் , வீரபாண்டி முந்திச் சின்னாக் கவுண்டர் , பாலம்பட்டி வடமலை கவுண்டர் ,மல்லூர் மாணிக்க கவுண்டர் , அண்ணாமலைப் பட்டி சேர்வை முத்தாக் கவுண்டர் , பொன்பரப்பி பெரிய குப்ப கவுண்டர் ,அம்மாபாளையம் ஆட்டையாம்பட்டி ராயகவுண்டர் ,வெங்காப்பட்டி குழந்தை
கவுண்டர் ,வாழைக் குட்டைப்பட்டி பத்திரிக் கவுண்டர் ,அம்புக்கட்டி பாளையம்குட்டையாக் கவுண்டர் போன்ற நூற்றுக்கும் மேற்ப்பட்ட வன்னிய கவுண்டர்களின் பெயர்கள் இப்பட்டயத்தில் இடம் பெற்றுள்ளன .
இவை அனைத்தும் நெய்வேலி வன்னியர் செப்பேடு சொல்லும் பள்ளி கவுண்டர்கள்

7. மேலும் ஆ.சிங்காரவேல் முதலியார் எழுதிய அபிதான சிந்தாமணியில் (பக்கம் 375 )

கவுண்டர் என்ற சொல்லுக்கு –“பள்ளிகளுக்கும், சில இடங்களில் வெள்ளாளர்களுக்கும் பட்டப் பெயரை இருக்கிறது ” என்று கூறப்பட்டுள்ளது .

8. வன்னிய கவுண்டரும் சித்தாண்டபுரம் செப்பேடும் :"சித்தாண்டபுரம் செப்பேடு"
வன்னிய கவுண்டர்களின் வீரத்தையும்,துணிவையும் இச்செப்பேடு உணர்த்துகிறது.இதில்  உள்ள சில சுவையான சில பகுதிகள் உங்கள் பார்வைக்கு.                                                                                                                                                      "சிறுதலை பூண்டியிலிருந்து ஒலகளந்த கவுண்டனும் யேகாம்பிறி கவண்டனும் ரண்டு பேரும் மேர்க்கே யேரி வறச்சே சிங்கிரி பட்டி கணவாயிலே நூரு வேடராகிறவர்கள் வந்து மறிச்சிக் கொண்டபோது ஒலகளந்தா கவுண்டனும் யேகாம்பிரி கவுண்டனும் இவர்கள் ரண்டு பேரும் அவர்கள் மேல் சண்டைகள் செய்து அவர்களில் நாலு பேரை வெட்டித் துறத்திவிட்டு அப்போ ஆலம்பாடி வந்து சேந்து அந்தக் கோட்டையில் வீட கட்டிக்கொண்டு நிலையாயிறுந்தார்கள்.அப்போ ஆலம்பாடி கோட்டையிலிறுக்கப்பட்ட யிறுப்பாளிநாயக்கன் நீங்களாரென்று கேட்டான் நாங்கள் படையாச்சிகளென்று சொன்னார்கள் ஆனால் நம்பள் பக்கத்திலெ யிறுங்கோளென்று சேத்திக்கொண்டான்

"மற்றொரு பகுதி:

"உலகளந்தா கவண்டனும் ஏகம்பிரி கவண்டனும் ஆலம்பாடி நாட்டையாண்டு
கொண்டிருக்கும் காலத்தில் பெரியப்ப நாயக்கன்,சின்னப்ப நாயக்கன்,பாலப்ப
நாய்க்கன் இவர்கள் வந்து என்களுக்கு வர்த்தனை உங்கள் வீட்டுக்கு ரண்டு பணம்குடுக்கவேண்டுமென்று கேட்டார்கள்.அதுக்கவர்கள் நாங்கள் குடுக்குறதில்லை யென்றார்கள்.நாங்கள் விடுகுறதில்லை என்றார்கள் இவர்கள்.ஆடு மாட்டை கொள்ளை ஓட்டினார்கள் அவர்களில் பத்து வேடரை வெட்டிக் கொள்ளையே திருப்பிக்கொண்டார்கள்.செகதேவராயரண்டை போனார்கள்.பாலப்ப நாயக்கன் எங்கள் வர்த்தனையைக் கேட்டோம்
என்று சொன்னான்.ஏகாம்பிரி கவுண்டன் நாங்கள் வன்னிய வம்ஷம் அப்படி
கொடோமென்றோம்.எங்கள் ஆடுமாடெல்லம் கொள்ளையிட்டார்கள் நாங்கள் அவர்களை பத்துப்பேரை வெட்டி கொள்ளையை திறுப்பிக்கொண்டோமென்றான்.செகதேவராயர் வேடர் கையில் 100 பொன் அபுறாதமாக வாங்கிக்கொண்டு நீங்கள் சவுரியவான்களென்று மெச்சி உங்களுக்கு கென்னா வெகுமானம் வேணுமென்றார் அப்போது ஏகாம்பிரி கவுண்டனெங்களுக்கின்ன சாதி அதிகாரம் வேணுமென்று
கேட்டார்கள்"

வன்னிய கவுண்டரும் சித்தாண்டபுரம் செப்பேடும் :
விளக்கம்:                                                                                                                         சிறுதலைப்பூண்டி என்ர இடத்திலிருந்து உலகளந்தா கவுண்டர், ஏகாம்பர கவுண்டர் என்ற வன்னியர் இருவர் மேற்கு நோக்கி செல்கையில் அவர்களை ஒரு கணவாயினருகே நூறு வேடர்கள் வழி மறிக்கின்றனர்.ஆனால் இவ்விருவரும் அவ்வேடரோடு போரிட்டு அவர்களில் நான்கு பேரைக் கொன்றனர்.இதனைக் கண்ட அந்த
வேடர் கூட்டம் சிதறி ஓடிவிட்டது.இதன் பிறகு இந்த வன்னிய கவுண்டர் இருவரும் ஆலம்பாடி எனும் ஊரில் குடியமர்ந்தனர். ஆலம்பாடி பகுதியை அப்போது ஆட்சி செய்த (தெலுங்கு) இறுப்பாளி நாயக்கன் என்பவன் இவர்களை பற்றிக் கேள்விப்பட்டு இவர்களிடம் யாரென்று கேட்டபோது தாங்கள் படையாட்சிகள் என்று அந்த இரு வன்னியரும் கூறினர்.நீங்கள் எங்களுக்கு உறுதுணையாயிருங்கள் என்று அவர்களை இறுப்பாளீ நாய்க்கன் சேர்த்துக்கொண்டான்.ஆலம்பாடி நாட்டில் உலகளந்தா கவுண்டன்,ஏகாம்பர கவுண்டன் இருவரும் தலைவர்கள் என்ற நிலையில் வலுவுடன் இருந்தபோது (தெலுங்கு) நாயக்கராட்சியின் பிரதிநிதிகளான பெரியப்ப,சின்னப்ப,பாலப்ப நாய்க்கன்கள் இவர்களிடம் வரி கேட்டனர்.கொடுக்கமாட்டோம் என்று மறுத்தனர் வன்னியர்கள். வரி கொடுக்க மறுத்ததால் நாய்க்கர் தமது ஆட்களுடன் வன்னியருடைய ஆடு.மாடுகளை ஓட்டிச் செல்லத் தொடங்கினர்.சினமுற்ற வன்னியர் நாய்க்கர் ஆட்களோடு போர் செய்து அவர்களில் பத்து பேரை வெட்டிக்கொன்று தமது ஆடு மாடுகளை மீட்டுக்கொண்டனர்.இரு தரப்பினரும் பெருமன்னனான செகதேவராயரிடம் சென்று முறையிட்டனர்.பாலப்ப நாய்க்கர் தரப்பினர் இவர்கள் வரி கொடுக்கவில்லை என்றனர்.ஏகாம்பர கவுண்டர் நாங்கள் வன்னியர் குலம் என்பதால் வரி கொடுக்க மறுத்தோம்.எங்கள் ஆடு,மாடுகளை கவர்ந்து செல்ல முயன்றதால் அவர்கள் ஆட்கள் பத்து பேரை வெட்டிக்கொன்றோம் என்றனர்.வழக்கை விசாரித்த செகதேவராயர் பாலப்ப நாய்க்கர் தரப்பிற்கு நூறு பொன் அபராதம் விதித்து பின்னர் ஏகாம்பர கவுண்டர் தரப்பை பாராட்டி உங்களுக்கு என்ன சன்மானம் வேண்டும் என்று வினவ அதற்கு அவர்கள் எங்களுக்கு எங்கள் இன ஜாதி தலைமைப் பொறுப்பு வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். இந்த செப்பேட்டில் ஏகாம்பர கவுண்டர் உள்ளிட்ட பல வன்னிய கவுண்டர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.மேலும் அதில் உள்ள மற்றொரு முக்கிய
செய்தி: ஒரு தேரோட்டத்தின்போது வன்னியர் தங்கள் விருதுகளைப் பயன்படுத்தக்கூடாது என்று வலங்கை ஜாதிகளைச் சேர்ந்தோர் மறித்து பிரச்சினை செய்ய வன்னிய கவுண்டர்கள் தம்மைத் தடுத்த வலங்கை ஜாதியாரை அடித்து துரத்தி தேரோட்டத்தை நடத்தினர்.
ஆக  வன்னியர்களுக்கு பத்தாம் நூற்றாண்டு முதலே கௌண்டர் என்னும் பட்டம் உண்டு என்பதற்கான ஆதாரங்கள் எண்ணற்றவை  . அடுத்து கொங்கு வெள்ளாளர்களை பார்ப்போம்                                                                                                                                                           
========================================================

கொங்கு வெள்ளாளர்கள் :                                                                                                              முல்லை நிலமாதலால், காடும், காடும் சார்ந்த நிலங்களாக கொங்கு காட்சியளித்தது. இங்கு வாழ்ந்த இனக் குழுக்கள், வேடர், ஆயர் மற்றும் எயினர் ஆகும். வேடர்கள் வேட்டைத் தொழிலையும் ஆயர்கள் கால் நடைவளர்த்தல், தினை, வரகு, அவரை, துவரை முதலிய பயிர்களை பயிரிடல் (விண்ணோக்கிய வேளாண்முறை) என்ற முறையில் பொருளாதார வாழ்க்கை இருந்தது. இவர்களுக்குள் கூட்டப்பிரிவுகள் இருந்தன. தாம் வாழும் முறை மற்றும் இடங்களுக்கேற்ப கூட்டப்பெயர்கள் நிலைத்து இருந்தன. திருமணத்திற்கான ஒழுக்க முறை கூட்டங்களிடையே வரையறை செய்யப்பட்டிருந்தது. தமிழகம் முழுவதும் மருத நிலப்பகுதிகளில் இனக்குழு சிதைவடைந்த நிலையில், கொங்கில் மட்டும் சிதையாமல் 12ஆம் நூற்றாண்டு வரையில் நீடித்தது. அது மட்டுமல்ல புறம்போக்கு நிலங்கள் ஏராளமாகவும் இருந்தன.      
                                                       13ஆம் நூற்றாண்டில் சோழ, பாண்டிய அரசுகளின் பொருளாதார தேவை கூடியது. நெல் அதிக உபரியை வழங்கும் தானியம் என்பதால், நெல்விளையும் நிலங்களிலும் முல்லை மற்றும் குறிஞ்சி நிலங்களிலும் பயிரிட முயற்சி எடுத்தனர். எனவே, பிரமதேயம் மற்றும் கோயில்கட்டி அதற்கான நிலங்களை உருவாக்க முனைந்தது. கொங்கு நாடு அதற்கு வசதியாக இருந்தது. இந்நிலத்தில் அமராவதி, நொய்யல், பவானி போன்ற ஆறுகளும், சண்முகநதி, பாலாறு, பெருந்தலாறு போன்ற சிறிய நதிகளும் ஓடிக்கொண்டிருந்தது. பல்வேறு கூட்டப்பெயர்களுடன் வேட்டுவர்களும், ஆயர்களும் இனக்குழுவாக வாழ்ந்து வந்தனர். வேட்டுவர்கள் வேட்டைத் தொழிலும், ஆயர்கள் கால்நடை வளர்ப்பும், தானியம் பயிரிடல் என்ற அளவில் பொருளாதார வாழ்வு இருந்தது. “ஆ கெழு கொங்கர்’’ “கொங்கர் ஆ பரந்தன்ன’’ என சங்க இலக்கியம் இவர்களைப் பதிவு செய்துள்ளது.       
                                                                                  கொங்கு தவிர்த்த இதரப்பகுதிகளில் வேளாண் தொழில் செய்வோரை, பாண்டிய வேளாளர், சோழிய வேளாளர் என அழைக்கப்பட்டு வந்தனர். இங்கு வேளாளர் என யாரும் இல்லை. எனவே, தஞ்சை தொண்டைமண்டலம் (புதுக்கோட்டை) ஆகிய பகுதிகளில் இருந்து வேளாளர்கள் கொங்கில் குடியேறினர் (நிக்கல்சன் 1887:86) இதையே, ”சோழன் பூர்வபட்டயம்’’, “அண்ணமார்கதை’’, “கொங்கு வேளாளர் புராணம்’’, ஆகியன உறுதிப்படுத்துகிறது. ((குறிப்பு : கொங்கு வெள்ளாளர்கள் பதின்மூன்றாம் நூற்றாண்டின் போதுதான் கொங்கு நிலத்திற்கு வருகிறார்கள் . ஆனால் பத்தாம் நூற்றாண்டிலேயே காமிண்டன் அல்லது கௌண்டர் என்னும் பட்டம் வன்னியர்கள் பெற்று அதை வழக்கத்திலும் கொண்டு வந்துவிட்டார்கள்))
குடியேறிய வேளாளர்கள் கொங்கிலுள்ள ஆயர்களுடன் ரத்தக்கலப்பு ஏற்பட்டு வேளாளர் என்ற புதியப் பெயரைத் தாங்கி நின்றனர். இவர்கள் குடியேறிய பின்பே, நீர்பாசனமுறை கொங்கு நாட்டில் உருவானது. குடியேறிய வேளாளர்கள் ஏற்கெனவே ஆயர்களிடம் உள்ள கூட்டம் (குலம்) முறையை ஏற்றுக்கொண்டனர். ஆயர்கள் அவர்களிடம் வேளாண் தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொண்டனர். இதன் பிறகே கல்வெட்டுகளில் வேளாளர் என்று பொறிக்கப்பட்டுள்ளது என அறிகிறோம். வேளாளர் என்ற சொல்லுக்கு வெள்ளத்தை ஆள்பவர் என்ற பொருள் உண்டு.                                                                                                                                              
  1. மருத நிலப்பகுதியில் இருந்த வேளாளர்கள் தமது சாதிப்பெயரை பிள்ளை என மாற்றிக்கொண்டது போல் கொங்கு வேளாளர்கள் தங்கள் பெயரை கவுண்டர் என மாற்றிக்கொண்டனர். இது தங்களை மேல்நிலையாக்கம் செய்வதற்கான நடவடிக்கையாகும்.                                                      ஆதாரம் : காலிங்கராயன் கால்வாய்  பற்றிய கட்டுரை (http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=303%3A2009-08-27-02-40-33&catid=911%3A09&Itemid=154)
  2.  கொங்கு வெள்ளாளர்கள் அண்மைய காலத்தில்தான் கவுண்டர் பட்டத்தை பயன்ப்படுத்தி வருகின்றனர் என்று கொங்கு வெள்ளாளர்
    சமூகத்தை சேர்ந்த முனைவர் .திரு .சு .ராஜவேலு அவர்கள் “தொல்லியல் சுடர்கள் ” என்ற நூலில் “கல்வெட்டுகளில் கொங்கு வெள்ளாளர் கூட்டுப் பெயர்கள் ” என்ற கட்டுரையில் (பக்கம் 176) கீழ்கண்டவாறு கூறியுள்ளார்.

“கூட்டுபெயர்கள் வரும் கல்வெட்டுகளில் கொங்கு என்ற இக்கால முன்னொட்டு காணப்படவில்லை . எனவே கொங்கு என்ற நிலவியல் சொல் பிற்காலத்தில் முன்னொட்டாக வந்துள்ளது என்பது தெளிவாக விளங்கும் . இதே போன்று கொங்கு வெள்ளாளக் கௌண்டர்களின் பின் ஒத்தான ‘கவுண்டர் ’ என்ற பட்டமும் ல்கல்வெட்டில் மிகக் குறைவாகவே காணப்படுகிறது என்று திரு .சு .ராஜவேலு அவர்கள் எழுதியுள்ளார் .                                                                                    

3.   ”1871 தொடங்கி 1931 வரை நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பில் இவர்கள் எதிலும் கொங்கு வெள்ளாளர் என்று கணக்கெடுக்க படவில்லை .. இதனை எட்கர் தர்ஸ்டன் என்பவர் "தென் இந்திய சாதியினர் மற்றும் பழங்குடியினர் " என்னும் புத்தகத்தில் கொங்க என்ற தலைப்பில் எழுதபெற்ற வசனம் இங்கே :            

KONGA-konga are kongu is a territorial term, meaning inhabitant of the territorial country.It is recent times of census, been returned as a division of a large number of classes mostly tamils which include – Ambattan, Kaiolan, Kammalan,Kuravan,Kusavan,Malayan,Odde,Parayan, upparaand vellala.It is used as a term of abuse among the Badagas of the Nilgiri hills. Yhose for example, who made mistakes in matching kolmgrens…were seornfully called konga by the onlookers.
    Similarly in parts of Tamil country a tall , lean and stupid individual is called a kongan.They seem to have little in     common with other vellalas,except the name, and appear to hold a lower position in society for reddis will not eat with them. They will dine with thotiyans and others of lower non bhramins castes.
Their devellings are generally Thatched huts.

4. இதனால்  அதுபோல இவர்கள் தனி சாதி என்ற அந்தஸ்து அடைய முடியாத நிலையே தொடர்ந்தது .. அப்போது வட தமிழகத்தில் வன்னியர்கள் கௌண்டர் என்ற பட்டதுடன் இருப்பதை கண்டு , அதை தங்கள் பெயருடன் சேர்த்து போட்டு தனி சாதியாக அடையாளம் பெற்றனர்   .  



INDIAN COMMUNITIES  என்ற புத்தகத்தில் கே.எஸ்.சிங் என்பவர் பின்வருமாறு எழுதியிருக்கிறார் .

“KONGU VELLALA/ KONGU VELLALA GOUNDER”
This is a community of tamilnadu who shares some common features with other vellala excepts the name.
They are distributed in Kongu nadu comprising the adjoining districts of tamilnadu and kerala.
IN TAMILNADU THEY ARE REFERRED TO AS KONGU VELLALAR, BUT AFFIX GOUNDAR AS S HONORIFIC TITLE BORROWED FROM THE PEOPLE OF THE NORTHERN DISTRICTS OF TAMILNADU.
In kerala, the kongu vellala goundar is called kongu vellala drive the name from their original place of habitants.

 ==========================================================

முடிவுரை :      
==========

கௌண்டர்  பட்டம்     

வன்னியர் குல க்ஷத்ரியர்:
  1. கல்வெட்டு படி பட்டம் கிடைத்த காலம் - பத்தாம் நூற்றாண்டு - சோழ மன்னரால் கொடுக்க பட்டது
  2. தமிழக சாதி பட்டியலில் அழைக்கப்படும் முறை - கௌண்டர்
  3. கௌண்டர் பட்டதுடன் அழைக்கப்படும் பகுதிகள் - தமிழ்நாடு முழுதும் கொங்கு நிலத்தையும் சேர்த்து கௌண்டர் பட்டம் கொண்டுள்ளனர்

கொங்கு வெள்ளாளர்
  1. கல்வெட்டு படி பட்டம் கிடைத்த காலம் -  13 ஆம் நூற்றாண்டில்தான்  வெள்ளாளர்கள் கொங்கு நிலத்திற்கு வருகின்றனர் .அதன் பின்தான் வெள்ளாளர்கள் கொங்கு வெள்ளாளர் என்றே மாற்றம் செய்தனர் . அதன் பிறகு வெள்ளைக்காரன் காலத்தில் நடந்த  சாதி வாரி கணக்கெடுப்பு வரை அந்த பட்டம் இல்லை .பின்பு மேல்நிலையாக்கம் செய்வதற்காக கௌண்டர் பட்டம் சேர்த்து கொண்டனர்
  2. தமிழக சாதி பட்டியலில் அழைக்கப்படும் முறை - கொங்கு வெள்ளாள கௌண்டர்
  3. கௌண்டர் பட்டதுடன் அழைக்கப்படும் பகுதிகள் - கொங்கு நிலம்


தமிழ்நாடு சாதி பட்டியலிலும் வெறும் கௌண்டர் என்பது வன்னியர்களை மட்டுமே குறிக்கிறது:                                                                 
  Vanniakula Kshatriya ( including Vanniyar, Vanniya, Vannia Gounder, Gounder or Kander, Padayachi, Palli and Agnikula Kshatriya )


ஆனால் கொங்கு வெள்ளலர்களுக்கோ கொங்கு வெள்ளாளர் என்றுதான் உள்ளதே தவிர, வெறும் கௌண்டர் என்று இல்லை . அதோடு ஏதாவது ஒரு பெயர் ஒட்டிதான் வருகிறது . அது அவர்களின் கூட்டத்தை குறிப்பது போல . வெறும் கௌண்டர் என்னும் பட்டம் வருவதில்லை

Kongu Vellalars( including Vellala Gounder, Nattu Gounder, Narambukkatti Gounder, Tirumudi Vellalar, Thondu Vellalar, Pala Gounder, Poosari, Gounder, Anuppa Vellala Gounder, Kurumba Gounder, Padaithalai Gounder, Chendalai Gounder, Pavalankatti Vellala Gounder, Pallavellala GounderSanku,Vellala Gounder,and Rathinagiri Gounder). 


காமிண்டன் அல்லது கௌண்டர் என்னும் பட்டம் பத்தாம் நூற்றாண்டிலேயே வன்னியர் குல க்ஷத்ரியர்க்கு கிடைத்துள்ளது . ஆனால் 13ஆம் நூற்றாண்டில்தான் வெள்ளாளர்கள் கொங்கு நாட்டுக்கு வந்து கொங்கு வெள்ளாளர் என்றே பெயரே பெற்றனர் .அதோடு அங்கு உள்ள ஆயர்களுடன் சேர்ந்து அவர்கள் உட்ப்பிரிவு பெயர்களையும் இவர்களும் சேர்த்து கொண்டனர் . இதனால் கௌண்டர் என்னும் பட்டம் இவர்கள் பயன் படுத்துவதற்கு பல நூற்றாண்டிற்கு முன்பிலுருந்தே வன்னியர் குல க்ஷத்ரியர் சாதியே பயன்ப்படுத்தி வருகிறது  என்பது தெளிவாகிறது . பள்ளி காமிண்டன் என்னும் பட்டம் போல கொங்கு வெள்ளாள காமிண்டன் என்ற பட்டம் எப்போது யாரால் தரப்பட்டது என்று தேடினால் கிடைக்கப்பெற்ற மாட்டாது . காரணம் அது பின்னாளில் கொங்கு வெள்ளாளர்கள் தங்களை மேல்நிலையாக்கம் செய்வதற்காக கௌண்டர் பட்டம் சேர்த்து கொண்ட நடவடிக்கையாகும்.

[நன்றி:: திரு.சியான் வசந்த் ]

பார்க்கவ குல உடையார்கள்




செய்தியை அளித்த திரு. சுவாமி அவர்களுக்கு நன்றி : 


பார்க்கவ குல உடையார்கள் தங்கள் இனம் என்று இதுவரை இணைய பக்கங்களில் எல்லாம் எந்த ஆதாரமும் இல்லாமல் எழுதுபவர்கள் இனியாவது உண்மையை உணரட்டும்.

பார்க்கவ குல உடையார்களின் "சிறிய கிருஷ்ணாபுரம் செப்பேடு" உண்மை நிலையை உணர்த்துவது.ஆதாரமில்லாமல் எழுதுபவர் கூற்று இனி எடுபடாது.

பார்க்கவ குலம் பற்றி சொல்லவெண்டுமென்றால் "தெய்வீக மன்னன்" பற்றி கூறுதல் அவசியம்.

திருக்கோவலூரை ஆண்ட தெய்வீக மன்னனின் வழி வந்தோரே பார்க்கவ குல உடையார்கள்.

தெய்வீக ராஜன் மூவேந்தர் பகை: தெய்வீக ராஜன் திருக்கோவலூரை ஆளத் தொடங்கியபோது அவரிடம் இருந்த பச்சைப் புரவி(குதிரை) ஒன்றைப் பற்றி கேள்விப்பட்டு அதனை வாங்கி வருமாறு தமது அமைச்சர்களை மூவேந்தர்கள் அனுப்பினர்.

குதிரை வேண்டுமானால் போரிட்டு பெற்றுக் கொள்ளுங்கள் என தெய்வீக மன்னன் தெரிவிக்க மூவேந்தர்களும் போரிட வந்தனர்.ஆனால் போரில் மூவேந்தரும் தோல்விகண்டனர். 

தோல்வி கண்ட மூவேந்தர்களும் தெய்வீக மன்னன் வெற்றி பெற்றார் என ஒப்புதல் வழங்கி எந்த நிலப்பகுதிகள் அவருக்கு வெண்டும்ன்று கேட்க தாம் பச்சைப் புரவியேறி அது ஒரு வட்டம் வரும் அளவுள்ள நாடு போதுமென்று கூறினார்.

இதனை கீழ்க்காணும் பாடல் தெரிவிக்கிறது:

"வடதிசைக் கடியாறு குணதிசைக் கரிய கடல் வளம் வராத குடதிசைக்குக் கொல்லிமலை தெந்திசைக்கு திவ்வியாறு குலவுமெல்லை யடவுபட கணப்பொழுதிலொரு வட்டஞ் சூழ்ந்த பரியதன்மேல் வந்து புடவிதனிலறச ரொருமூவர் திருமுன்பு போந்தான் வேந்தன்"

இந்தப் பாடல் கிருஷ்ணாபுரம் செப்பெட்டில் உள்ளது.

மூவேந்தர்களும் குதிரை நடந்த தேசமெல்லாவற்றையும் தெய்வீகராசனுக்கு விட்டுக் கொடுத்து, அம்மன்னனுக்கு திருக்கோவிலூரில் பட்டாபிஷேகம் செய்து வைத்தார்கள்.

-----

இத்தகைய பெருமை மிகுந்த தெய்வீகராசன் வழி வந்தவர் தமது இனத்திற்கு இம்மையில் புகழும், மறுமையில் வீடுபேறும் பெறுவதற்காக பொதுவாக ஒரு மடம் ஏற்படுத்த முடிவு செய்தனர்.

இதனை சிறிய கிருஷ்ணாபுரம் தெய்வீகராசன் செப்பேடு தெளிவாகத் தெரிவிக்கிறது.
அந்த செப்பேட்டில் தெய்வீகராசன் வழிவந்தோர் யார் யார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

செப்பேட்டில் அந்த செய்தி வரும் பகுதி :

"சேர மண்டலம், சோழ மண்டலம், பாண்டிய மண்டலம், கொங்கு தேசம் 4 மண்டலத்துண்டாகிய மலைய மன்னர், நத்த மன்னர், பாளையக்காரராகிய பண்டாரத்தார், நயினார், உடையார், சீமை நாட்டார், சில்லரை கிராமத்து வன்னியர் யிவர்கள் அனைவருக்கும் பொது மடம் கிரமமாய் நடந்து வருகிற படியினாலே", ஆண்டு  வர்த்தனையாகக் கட்டளையிட்ட சுவாதியம்:

தணிடிகை(பல்லக்கு) துரைமாருக்குப் பணம் 10 குதிரை, குடை பெற்ற் பேருக்குப் பணம் 5 தலைக்கட்டுக்குப் பணம் 2 கலியாணத்துக்குப் பணம் 2 மாப்பிள்ளை வீட்டுக்குப் பணம் 2

இது பிரகாரம் ஆண்டுக் காண்டு தம்பிரான் வந்த உனே பட் அரிசிகளும், பணமும், வெற்றிலையும் கொடுத்துத் தங்கள் கீர்த்தி போல கிரமமாய் நடப்பித்துக் கொண்டு வரவேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

-----------

மேற்கண்ட செப்பேட்டுச் செய்தியில் பாளையக்காரராகிய நயினார் உடையார் என அரியலூர், உடையார்பாளையம் பாளையக்காரர்களே குறிப்பிடப்பட்டுள்ளனர். சில்லரை கிராமத்து வன்னியர் என்பது பல்வேறு சிறு கிராமங்களில் வசித்துவரும் வன்னிய ஜாதியினரைக் குறிக்கின்றது.இதில் மாற்றுக் கருத்தே இல்லை.

இந்தச் செப்பேட்டின் காலம் கி.பி 18 ஆம் நுற்றாண்டு. 

தெய்வீகராசன் வழிவந்தோரகிய இவர்கள்தான் பொது மடம் கட்டினர்.எனவே வன்னிய ஜாதியினரும் தெய்வீகராசன் வழிவந்தோர்தான். பார்க்கவகுலமும் வன்னியர் இனமும் ஒன்றே என்பது உறுதியாகிறது.

இந்தச் செப்பெட்டைக் காணும் யாவரும் இந்த உண்மையை ஒப்புக்கொள்வார்கள்.
 சோழர் என்று உரிமை கூற வழி ஏதும் இல்லாமல் பார்க்கவ குல உடையார்களோடு தம்மை தொடர்புபடுத்தி ஆதாரமில்லாத செய்திகளை தொடர்ந்து எழுதினால் உண்மை மறைந்துவிடுமா?

தெய்வீகராசன் வழி வந்தோர் மலையமன்னர், நத்த மன்னர், வன்னியர் என்று 18 ஆம் நூற்றாண்டு செப்பேடு கூறுவதை யாரும் மறுக்கமுடியாது.

பிற்காலத்தில் ஆண்ட மலையமான்கள் வன்னியர். சங்ககால மலையமான் வன்னியர் அல்ல என்று இனி கூற முடியாது.

தெய்வீகராசன் சங்ககால மலையமானின் முன்னோடி.

[நன்றி:: திரு.சுவாமி & சியான் வசந்த் ]

Saturday, 27 April 2013

மரக்காணம் கலவரம் சம்பந்தமாக திராவிடம் பேசுபவருக்கு 10 கேள்விகள்?






மரக்காணம் கலவரம் சம்பந்தமாக திராவிடம் பேசுபவருக்கு 10 கேள்விகள்?

1. 300 கீ.மீ அப்பால் இருந்து வருபவர்களுக்கு மரக்காணம் பகுதியில் உள்ள தாழ்த்தப்பட்டோர் பகுதி எப்படி தெரியும். .. வரும் வழியில் ஆயிரகணக்கான ஊர்களில் இப்படி எந்த சம்பவமும், சின்ன பிரச்னை கூட வரவில்லையே...

2. மாநாட்டு வருபவர்களுக்கு எப்படி கிடைத்தது அறிவாலும், உருட்டு கட்டையும், பெட்ரோல் குண்டுகளும்...

டீசல் வேனில் பெட்ரோல் எப்படி வரும்... ரோட்டில் லுங்கி மற்றும் அரைகால் சட்டையுடன் கையில் தடி மற்றும் ஆயுதத்ங்களுடன் உள்ளவர்கள் யார்...??

3. எந்த கட்சி மாநாடுகளை நடத்தினாலும் கட்சிகாரர்கள் உற்சாகமாக வருவார்கள் அவர்களை தடுத்து சாலை மறியல் செய்தல் என்னாகும்...

4. கலவரம் செய்யவேண்டும் என்ற எண்ணதோடு வருபவன் மாநாட்டிற்கு போகும்போது செய்வானா அல்லது மாநாட்டை முடித்துவிட்டு திரும்பி வரும்போது செய்வானா?

மாநாட்டிற்கு போகும்போது கலவரம் செய்தால் மாநாட்டை முடித்துவிட்டு திருப்பி அந்த வழியே வரமுடியாது பிரச்னை ஏற்படும் என்று அவனுக்கு தெரியாதா? கலவரம் பண்ணவேண்டும் என்ற எண்ணத்தோடு உள்ளவன் போகும்போது செய்திருப்பானா?

5. மரக்காணம் பகுதியில் வீட்டை கொளுத்தினர்கள் ஆனால் ஒருவருக்கும் அடி காயங்கள் ஏதும் இல்லையே...
//எரிந்த வீட்டிற்குள் எரியாத மாடு எப்படி வந்தது.//

6. பத்திரிகைகளில் வந்த 2 விதமான செய்திகள் :

//தினத்தந்தி, தினமலர்,தினமணி:::::::உள்ளுர் ஆட்கள் இரண்டுபேர் சென்ற இருசக்கரவாகனம் காரில் மோதியது , பின்பு தகவல் அறிந்த உள்ளுர் விசிக கூட்டம் சாலை மறியலே கலவத்திற்கு காரணம்.//

//தினகரன்;:::::சாலையோரம் நடந்து சென்ற அப்பாவி தலித்கள்மீது வன்னியர்கள் குடித்துவிட்டு பீர்பாட்டிலை அடித்ததே கலவரத்துக்கு காரணம்.//

7. பொதுமக்கள் என்றால் என்ன அர்த்தம் அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆனால் செட்டியார், ரெட்டியார், நாயுடு, முதலியார், அய்யர் என யாரும் கலவரத்தில் இடுபடவில்லையே...

8. கலவரத்தில் பா.ம.க. வை சேர்ந்த 2 பேர் உயிர் இழந்துள்ளனர், தாழ்த்தப்பட்டோர் மேல் நக கீறல்கள் கூட விழவில்லை...

9. கலவரத்தில் ஈடுபட்டதாக பா.ம.க. வை சேர்ந்த 1200 க்கும் மேற்பட்டோர் கைது, மற்றவர் எல்லாம் வேடிக்கை மட்டும் பார்த்து கொண்டிருந்தனர்...

10. எல்லாவற்றிற்கும் ஜாதி சாயத்தை பூசாதிர்கள். தாரசு எப்போது ஒரேபக்கமாக இருக்காது... மாறும்...


(courtesy::
Muthurv Venkatachalam)

மது ஒழிப்பு: மருத்துவர் இராமதாசு அவர்களின் மாபெரும் சாதனை!

மது ஒழிப்பு: மருத்துவர் இராமதாசு அவர்களின் மாபெரும் சாதனை!

மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களை நிறுவனராகக் கொண்டுள்ள 'வழக்கறிஞர் சமூகநீதிப் பேரவை' அமைப்பின் சார்பில் அதன் தலைவர் க. பாலு தொடர்ந்த பொதுநல வழக்கில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க உத்தரவை பிரப்பித்துள்ளது சென்னை உயர்நீதி மன்றம்.

சாலை விபத்திலும் சாராய விற்பனையிலும் முன்னணியில் உள்ள தமிழ்நாட்டில், மிகப் பெரும்பான்மையான சாலை விபத்துகளுக்கு மதுபானமே காரணமாக உள்ளது. இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் சாலை விபத்துக்களும், உயிரிழப்புகளும் நடைபெறும் மாநிலம் என்ற அவப்பெயரை தமிழகம் பெற்றிருப்பதற்கு நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள மதுக்கடைகள் தான் காரணம் என்பதால், அவற்றை மூடும்படி ஆணையிடக் கோரி 'வழக்கறிஞர் சமூகநீதிப் பேரவை' சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மார்ச் 31 ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்று ஆணை பிறப்பித்தது. மதுக்கடைகளை அகற்றுவதற்கு கூடுதல் கால அவகாசம் கோரி தாக்கல் செய்யப்பட்ட 2 மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதிகள், மார்ச் 31 ஆம் தேதிக்குள் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் அனைத்தும் கண்டிப்பாக அகற்றப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 504 மதுக்கடைகளும், மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள 1500 க்கும் அதிகமான மதுக்கடைகளும் மூடப்படும் நிலை உருவாகியுள்ளது. 

சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு

http://www.scribd.com/doc/133977249/Remove-Tasmac-Shops-on-Highways-Madras-High-Court-Order-PMK-Dr-Ramados,,,

மரக்காணத்தில் யாரை யார் அடித்தது?முற்போக்கு வேடதாரிகளின் கவனத்திற்கு!

மாமல்லபுரத்தில் நடந்த சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழாவுக்கு வந்த இளைஞர்களில் இரண்டு பேர் மரக்காணம் அருகே கொலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால், தமிழ்நாட்டின் முற்போக்கு வேடதாரிகளும் பத்திரிகைகளும் பாதிக்கப்பட்ட வன்னியர்கள் மீதே குற்றத்தைச் சுமத்தும் இழி செயலில் ஈடுபட்டுள்ளனர். (இதுகுறித்து மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களின் அறிக்கை)

அமைதியான முறையில் கூட்டம் கூடுவதற்கான உரிமை எல்லோருக்கும் உண்டு. அந்த வகையில் வன்னியர்களின் இளைஞர் பெருவிழா நடத்தப்பட்டது. ஆனால்,தமிழக அரசின் மூலமாகவும் நீதிமன்ற வழக்குகள் மூலமாகவும்  மாநாட்டைத் தடுக்க ஒரு கூட்டம் முயற்சித்தது. அத்தனைத் தடைகளையும் உடைத்து மாபெரும் மாநாடு நடத்தப்பட்டது.
மாபெரும் மாநாடு 
இந்த மாநாட்டிற்கு எப்படியாவது குந்தகம் விளைவிக்க வேண்டும் என்று துடித்த ஒரு கூட்டம் அதற்காக திட்டமிட்டு மரக்காணத்தில் கலவரத்தை அரங்கேற்றியது மட்டுமல்லாமல், இரட்டைப் படுகொலைகளையும் செய்து, இப்போது வன்னியர்கள் மீதே குற்றச்சாட்டை அள்ளி வீசிக்கொண்டிருக்கின்றனர்.

யாரை யார் தாக்கியது?

கீழே உள்ள காணொலியில் வெளியூர்களில் இருந்த மாமல்லபுரம் நோக்கி செல்லும் வன்னியர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது தெளிவாக பதிவாகியுள்ளது.

அப்பாவி வன்னியர்கள் மீது தாக்குதல்


இந்தக்கலவரத்தில் அரியலூரைச் சேர்ந்த செல்வராஜ், குடந்தையை சேர்ந்த விவேக் ஆகிய இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால், 1512 வன்னியர்கள் மீது வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர்ந்துள்ளது தமிழக அரசு.

மரக்காணத்தில் கலவரம் ஏன் நடந்தது?

மரக்காணத்தில் வன்னியர்களுக்கு எதிரான கலவரத்தை திட்டமிட்டு நடத்தி படுகொலையும் செய்தக் கூட்டம் இப்போது கலவரத்துக்கு வன்னியர்கள்தான் காரணம் என்று கற்பனையான கட்டுக்கதைகளைக் கட்டமைத்துக் கொண்டிருக்கின்றனர்.

தமிழ்நாட்டின் எல்லா பகுதிகளில் இருந்தும் எல்லா சாலைகளிலும் வன்னியர்கள் மாமல்லபுரம் நோக்கி வந்தனர். வன்னியர்களுக்கு கலவரம் செய்வது நோக்கமாக இருந்திருந்தால் எல்லா பகுதியிலும் கலவரம் நடந்திருக்க வேண்டும். ஆனால், மரக்காணம் தவிர வேறு எங்குமே அது போல நடக்கவில்லை.

ஒரே ஒரு இடத்தில் மட்டுமே நடந்த இக்கலவரத்துக்கு இரண்டு விதமான கட்டுக்கதைகளை பத்திரிகைகள் கட்டமைத்துக் கொண்டிருக்கின்றன. (அதாவது பத்திரிகைகளில் ஊடுருவி இருக்கும் வன்னியர் எதிர்ப்புக்கூட்டம் காழ்ப்புணர்ச்சியுடன் பாதிக்கப்பட்ட வன்னியர்கள் மீது சேற்றைப் பூச முயற்சிக்கிறது)

"கெட்டிக்காரன் புளுகு எட்டு நாட்களுக்கு" என்பது போல, வன்னிய எதிரிகளின் பச்சைப் பொய் எட்டு மணி நேரம் கூட நீடிக்கவில்லை. பொய் சொன்னாலும் பொருந்த சொல்ல வேண்டும் என்பார்கள். ஆனால், அவசரத்தில் ஆளுக்கொரு பொய்யை மாற்றிச் சொல்லி அம்பலப்பட்டு நிற்கிறது சதிகாரர்கள் கூட்டம். அதனைக் கீழே காண்க:

கட்டுக்கதை 1: மாநாட்டுக்கு சென்ற வாகனம் இருசக்கர ஊர்தி மீது மோதியதே காரணம்.

மாமல்லபுரம் வன்னியர் மாநாட்டுக்கு சென்ற பேருந்து ஒன்று, இரண்டு வாலிபர்கள் சென்ற இருசக்கர ஊர்தி மீது மோதியதாம். இதனால் கலவரம் மூண்டதாம். இந்த செய்தி டெக்கன் க்ரோனிகல் மற்றும் தினத்தந்தி ஆகிய நாளிதழ்களில் வெளியாகியுள்ளது.

"two youths identified as Ramesh and Hariharan were going on a two-wheeler towards Marakanam when a bus carrying PMK volunteers and bound for Mamal­lapuram reportedly dash­ed against the vehicle in­j­u­ring them. As news ab­out the incident spr­e­ad, a group of people blo­cked the East Coast Road resu­lting in vehicles piling up on the arterial road"   - Police fire in air on ECR Deccan Chronicle Saturday, Apr 27, 2013 


கட்டுக்கதை 2: வன்னியர்கள் குடித்துவிட்டு பீர்பாட்டிலை அடித்ததே கலவரத்துக்கு காரணம்.

"பாமகவினர், வேன் மீது அமர்ந்து பீர் குடித்ததாக கூறப்படுகிறது. பின்னர் பீர் பாட்டிலை நின்று கொண்டிருந்தவர்கள் மீது வீசியுள்ளனர். இதனால் பொதுமக்கள் திரண்டு சாலைக்கு வந்தனர்." என்று தி இந்து மற்றும் தினகரன் நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 "the violence erupted around Thursday noon when a small group of Vanniyar Sangam members were drinking near the social forest on the side of ECR. When they were questioned, a larger group assembled immediately and entered the Kattayantheru area of the Marakkanam Colony through the forest armed with sticks and petrol bombs" - Dalits lose certificates, valuables in violence unleashed by drunken mob, The Hindu, April 27, 2013


- இப்படி ஒரே கலவரத்துக்கு இரண்டு விதமான கட்டுக்கதைகளை கட்டமைத்துள்ளனர்.

இதிலும் தி இந்து ஒருபடி மேலே போய், 'மாட்டுக்கொட்டகையைக் கூட விடவில்லை' என்று எழுதியுள்ளது. (பசுமாட்டின் மீது தி இந்துவுக்கு உள்ள பாசம் புரிந்துகொள்ளக் கூடியதுதான்). இதனை நிரூபிக்க 'எரிந்த கொட்டகைக்குள் ஒரு எரியாத மாட்டை படுக்க வைத்து' புகைப்படம் எடுத்துள்ளனர். அந்த புகைப்படத்தைக் கீழே காண்க.

எரிந்த கொட்டகைக்குள் ஒரு எரியாத மாடு

தேவர் ஜெயந்தியிலும் தர்மபுரியிலும் படித்த பாடம்.

தேவர் குருபூஜைக்கு சென்று வந்த அப்பாவிகளை வழிமறித்து கொலைசெய்து, ருசிகண்ட கூட்டம் இப்போது அதனை மரக்காணத்திலும் அரங்கேற்றியுள்ளது.

தர்மபுரியில் சிறிய கொட்டகைகளைப் பிரித்துப் போட்டு உள்ளே வைத்திருந்த ஏராளமான நகை பணத்தைக் காணவில்லை என்கிற கட்டுக்கதையைக் கட்டமைத்து அரசாங்கத்திடம் பணம் பறித்தது போல - இப்போது மரக்காணத்திலும் நகையைக் காணவில்லை என்று நாடகம் ஆடுகின்றனர். (அரசாங்கத்திடம் பணம் பறிக்க இப்படி ஒரு வெட்கம்கெட்ட பிழைப்பு)

"வன்னியனை அடித்துவிட்டு வன்கொடுமை வழக்கா?

வன்னியனை  கொலைசெய்துவிட்டு வன்னியனுக்கே தண்டனையா?

இதுதான் நீதியா? இதுதான் தர்மமா?"

Tuesday, 23 April 2013

நமது ஆண்ட இனத்தின் பெருமைகளை, நாமே தான் காத்துக் கொள்ள வேண்டும்....

கட்டாயம் படித்துவிட்டு பகிருங்கள்
................................................................

Photo: கட்டாயம் படித்துவிட்டு SHARE பண்ணுங்கள்
................................................................

படத்திலுள்ள செய்தி வடமாவட்டங்களில் செல்வாக்குடன் இருக்கும் பாமக'வின் முதற்கட்ட முன்னேற்றம் என்றே  கூற வேண்டும்...அதிகம் குடித்துக் கொண்டிருந்த வன்னிய பெருங்குடி மக்களில் தற்சமயம் சிறிய அளவில் மாற்றம் ஏற்படத் துவங்கியுள்ளது..

இதில் நமது நம்பிக்கை என்னவெனில் அந்த சிறிய மாற்றம், பெரிய மாற்றமாக மாறி வன்னியர் அதிகமாக உள்ள 14 மாவட்டங்களிலும், ஆரோக்கியமான சூழல்  ஏற்படும் என்பதே...அது பெருவாரி வன்னியர்கள் கைகளில் மட்டுமே உள்ளது...

அதே சமயம் வன்னியர்கள் அனைவரிடமும்...நான் வைக்கும் ஓர் வேண்டுகோள் என்னவெனில், நாளை மறுநாள் நடக்கவிருக்கும், கோடி இளைஞர்கள் கூடும் வன்னிய பெருவிழாவில், யாரும் குடித்துவிட்டு சென்றுவிடாதீர்....ஏனெனில் வன்னியர்கள் மரத்தை வெட்டுபவர்கள்,வீடு கொளுத்துபவர்கள், கொள்ளை அடிப்பவர்கள் என்று கொச்சைப் படுத்தி செய்தி வெளியிட சில பத்திரிக்கை ஊடகங்கள் காத்துக்கொண்டுள்ளது... 

மிகவும் குறிப்பாக வன்னியர்கள் குடிகாரர்கள், ''வன்னிய சித்திரை விழா நடைபெறும் சமயம், மாமல்லபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் டாஸ்மாக் விற்பனை சிறப்பாக இருக்க வாய்ப்புள்ளது...'' என்று நேரடியாகவே வன்னியர்களை தினமலம் போன்ற சில பத்திரிக்கைகள் [மற்ற கட்சியினர் சொன்னதாக சொல்லி] கேலி செய்து கொச்சையாக செய்தி வெளியிட்டு ஒட்டுமொத்த வன்னியர்களையும் கேவலப்படுத்தி வருகிறது.

அவர்களின் முகத்தில் வன்னியர்கள் கரியை பூசவேண்டும்... மாமல்லபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள எந்த டாஸ்மாக் கடைகளிலும் மது வாங்கவேண்டாம். மேலும் 

முக்கியமாக சித்திரை பெருவிழா அன்று 
யாரும் குடிக்கவேண்டாம்...
சண்டை & சச்சரவுகளும் வேண்டாம்...

நமது ஆண்ட இனத்தின் பெருமைகளை,
நாமே தான் காத்துக் கொள்ள வேண்டும்....

என்றும் உண்மையுடன்
அரசகுலன் வன்னித்தமிழன்

 
 
படத்திலுள்ள செய்தி வடமாவட்டங்களில் செல்வாக்குடன் இருக்கும் பாமக'வின் முதற்கட்ட முன்னேற்றம் என்றே கூற வேண்டும்...அதிகம் குடித்துக் கொண்டிருந்த வன்னிய பெருங்குடி மக்களில் தற்சமயம் சிறிய அளவில் மாற்றம் ஏற்படத் துவங்கியுள்ளது..

இதில் நமது நம்பிக்கை என்னவெனில் அந்த சிறிய மாற்றம், பெரிய மாற்றமாக மாறி வன்னியர் அதிகமாக உள்ள 14 மாவட்டங்களிலும், ஆரோக்கியமான சூழல் ஏற்படும் என்பதே...அது பெருவாரி வன்னியர்கள் கைகளில் மட்டுமே உள்ளது...

அதே சமயம் வன்னியர்கள் அனைவரிடமும்...நான் வைக்கும் ஓர் வேண்டுகோள் என்னவெனில், நாளை மறுநாள் நடக்கவிருக்கும், கோடி இளைஞர்கள் கூடும் வன்னிய பெருவிழாவில், யாரும் குடித்துவிட்டு சென்றுவிடாதீர்....ஏனெனில் வன்னியர்கள் மரத்தை வெட்டுபவர்கள்,வீடு கொளுத்துபவர்கள், கொள்ளை அடிப்பவர்கள் என்று கொச்சைப் படுத்தி செய்தி வெளியிட சில பத்திரிக்கை ஊடகங்கள் காத்துக்கொண்டுள்ளது... 

மிகவும் குறிப்பாக வன்னியர்கள் குடிகாரர்கள், ''வன்னிய சித்திரை விழா நடைபெறும் சமயம், மாமல்லபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் டாஸ்மாக் விற்பனை சிறப்பாக இருக்க வாய்ப்புள்ளது...'' என்று நேரடியாகவே வன்னியர்களை தினமலம் போன்ற சில பத்திரிக்கைகள் [மற்ற கட்சியினர் சொன்னதாக சொல்லி] கேலி செய்து கொச்சையாக செய்தி வெளியிட்டு ஒட்டுமொத்த வன்னியர்களையும் கேவலப்படுத்தி வருகிறது.

அவர்களின் முகத்தில் வன்னியர்கள் கரியை பூசவேண்டும்... மாமல்லபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள எந்த டாஸ்மாக் கடைகளிலும் மது வாங்கவேண்டாம். மேலும் 

முக்கியமாக சித்திரை பெருவிழா அன்று 
யாரும் குடிக்கவேண்டாம்...
சண்டை & சச்சரவுகளும் வேண்டாம்...

நமது ஆண்ட இனத்தின் பெருமைகளை,
நாமே தான் காத்துக் கொள்ள வேண்டும்....

என்றும் உண்மையுடன்
அரசகுலன் வன்னித்தமிழன்